ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நேரம் படத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவராக நடித்திருந்த பாபிசிம்ஹா, சித்தார்த் நடித்த ஜிகர்தண்டாவில் மதுரை ஏரியா ரவுடியாக நடித்தார். ஆனால் அந்த படத்தில் அந்த ரவுடி கதாபாத்திரத்தை மையப்படுத்தியே கதை பின்னப்பட்டிருந்ததால் படம் வெளியானபோது கதாநாயகன் சித்தார்த்தை விட வில்லன் பாபி சிம்ஹாவுக்குத்தான் நல்ல பெயர் கிடைத்தது, அவர்தான் பேசப்பட்டார்.
இருப்பினும், பாபி சிம்ஹா என் தம்பி. அதனால் என் படத்தில் அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது எனக்கு சந்தோசமே என்று ஒரு மேடையில் சொன்னார் சித்தார்த். ஆனபோதும், அதன்பிறகு பாபியுடன் அவர் முன்பு மாதிரி நட்பு வைத்துக்கொள்ளவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் சித்தார்த்திடம் கதை சொன்ன ஒரு டைரக்டர், அந்த படத்தில் இன்னொரு ஹீரோ கேரக்டர் இருப்பதாக சொன்னவர், அந்த வேடத்துக்கு பாபி சிம்ஹாவை புக் பண்ணயிருப்பதாக கூறினாராம். ஆனால், அதைக்கேட்டு செம டென்சனாகி விட்டாராம் சித்தார்த். அப்படின்னா உங்க படத்துல நான் இல்லேன்னு முடிவு பண்ணிக்கிடுங்க என்று உரக்க சொல்லிவிட்டு எழுந்து சென்று விட்டாராம்.
அதையடுத்து அவரை சமாதானம் செய்த டைரக்டர், வேறு யாராவது வளர்ந்து வரும் நடிகரை அந்த வேடத்தில் நடிக்க வைக்கிறேன் என்று சித்தார்த்திடம் கேட்டுக்கொண்ட பிறகே நடிப்பதற்கு சம்மதம் சொன்னாராம்.