ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சரத்குமார் நடித்த சத்ரபதி படத்தை இயக்கியவர் ஸ்ரீமகேஷ். அவர் 12 வருடங்களுக்குப்பிறகு தற்போது சரித்திரம் பேசு என்ற படத்தை இயக்கியுள்ளார். சரவணன், கிருபா, கன்னிகா, தாரணி, கஞ்சா கருப்பு ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் ஆடியோ விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டைரக்டர் பேரரசு, காமெடியன் கஞ்சாகருப்புவை நேரடியாகவே தாக்கிப் பேசினார். அதாவது, பேச ஆரம்பிக்கும்போதே, திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம் என்ற தொடங்கியவர், நான் இதுவரைக்கு பல ஆடியோ நிகழ்ச்சிகள்ல பார்த்துட்டேன். இந்த கஞ்சா கருப்பு கதாநாயகி பக்கத்துலதான் உட்காருறாரு.
இந்த விழாவுக்கு வந்தப்பவும் நான் கவனிச்சிக்கிட்டேதான் இருந்தேன். கரைக்ட்டா கதாநாயகி பக்கத்துல போய் செட்டிலாகிட்டாரு. இனிமே அவரை யாரும் அப்படி உட்கார அலோவ் பண்ணாதீங்க. ஆண்கள் பக்கத்துல உட்கார வையுங்க என்று கிண்டலாக பேசினார். அதன்பிறகு பேசிய இயக்குனர் ராஜ்கபூரும் பேரரசு பேச்சுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையிலேயே பேசினார்.
ஆனால் அவர்களைத் தொடர்ந்து பேச வந்த கஞ்சா கருப்புவோ, அவர்களுக்கு நெத்தியடியாக பதில் கொடுக்கப்போகிறார் என்று பார்த்தால், கோழி மிதிச்சு குஞ்சு சாகுமா? எங்க அண்ணனுங்க என்ன பேசினாலும் அது என்னை ஒன்னும் பாதிக்காது என்று சொல்லிவிட்டு போய் அமர்ந்து விட்டார்.