தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் அஞ்சலி தான் நடிக்கும் கன்னடப் படத்தில் முதல் முறையாக சொந்தக் குரலில் பேச உள்ளார். தமிழிலும், தெலுங்கிலும் சொந்தக் குரலில் பேசும் அஞ்சலிக்கு தாய் மொழி தமிழ்தான் என்றாலும், அவருடைய தமிழ்ப் பேச்சிலும் ஒரு வசீகரம் இருக்கும். வட இந்திய நடிகைகளைப் போல் அந்த அளவிற்கு சிகப்பாக இல்லையென்றாலும், அஞ்சலியின் மாநிறமும், அவருடைய பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றமும் அவருக்கு இங்கும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
திரையுலகில் அறிமுகமான காலகட்டத்திலேயே ஒரு கன்னடப் படத்தில் அஞ்சலி நடித்திருந்தார். அதன் பின் தமிழிலும், தெலுங்கிலும் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார். தற்போது கன்னடத்தின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த வாய்ப்பைத் தவற விடாமல் நடித்து முடித்து விட்டார். இப்போது படத்தின் டப்பிங் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் இயக்குனர் அஞ்சலி சொந்தக் குரலில் பேசினால் நன்றாக இருக்கும் என்று சொன்னதையடுத்து அஞ்சலியும் சொந்தக் குரலில் பேச ஆரம்பித்துவிட்டாராம்.
தமிழ், தெலுங்கு படங்களுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கன்னடத்தில் அஞ்சலி நடித்தது போல் விரைவில் மலையாளத்திலும் ஒரு இடைவெளிக்குப் பிறகு நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.