அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
அட்டகத்தி மூலம் அறிமுகமான நந்திதா தற்போது பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். நந்திதாவின் மானேஜர் என்று சொல்லிக் கொண்டு சிலர் தயாரிப்பாளர்களை அணுகி கால்ஷீட் பேசி வருவதாக நந்திதாவுக்கு தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வருமாறு:
'அட்டகத்தி' படத்தின் மூலம் அறிமுகமாகி, நீங்கள் (மீடியாக்கள்) அளித்த ஆதரவு, ஆலோசனை, அன்பின் காரணமாக 'எதிர்நீச்சல்', 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'முண்டாசுப்பட்டி', 'நலனும் நந்தினியும்', 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி' போன்ற படங்களில் எனது நடிப்புத்திறனை மேம்படுத்திக் கொண்டேன். தற்போது சீனுராமசாமியின் இயக்கத்தில் 'இடம்பொருள் ஏவல்', ராதாமோகன் இயக்கத்தில் 'உப்புக்கருவாடு', விமலுக்கு ஜோடியாக 'அஞ்சல' மற்றும் 'மிர்ச்சி' சிவாவுடன் பெயரிடப்படாத புதிய படம் என பல படங்களில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன்.
உங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துகளின், வழிகாட்டுதல்களின் மூலம் என்னை சீராக செதுக்கிக்கொள்ளவும் விரும்புகிறேன். தரமான படங்களை தேர்வு செய்யவும் எனது நடிப்புத்திறனை மேம்படுத்தவும் தங்களுடைய விமர்சனங்கள், அன்புமொழிகள் நிச்சயம் பேருதவியாக அமையும் என உளமாற நம்புகிறேன்.
மேலும், எனது கால்ஷீட் விவரங்களை எனது பெற்றோரை பார்த்துக் கொள்கின்றனர். எனக்கு என தனியாக மேனேஜர் யாரும் கிடையாது என்பதையும் உங்களுக்கு இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு நந்திதா தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.