பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ரஜினி நடித்த லிங்கா படத்தால் தங்களுக்கு 33 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக விநியோகஸ்தர்கள் சிலர் கூறி வந்தனர். பல போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையின் முடிவில் 10 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேசும், ரஜினியும் சம்மதம் தெரிவித்து அந்தப் பணத்தை தயாரிப்பாளர் சங்கத்திடம் ஒப்படைத்து விட்டனர்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு நேற்று (மார்ச் 19) ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த லிங்கா படத்தின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர ரஜினி ஒரு பெரிய தொகையை இழப்பீடாக கொடுத்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். இதற்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மூலமாக எங்களுக்கு தெரிவித்து விட்டார். மேற்படி தொகையும் எங்களிடம் கொடுக்கப்பட்டுவிட்டது. நாங்களும் இந்த தகவலை சம்பந்தப்பட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் தெரிவித்து விட்டோம். அவர்களும் இதை ஒத்துக் கொண்டு சம்மதம் தெரிவித்தனர்.
ஆனாலும் கடந்த 10 நாட்களாக இந்த தொகையை தங்களுக்குள் எப்படி பிரித்துக் கொள்வது என்ற குழப்பத்தில்தான் பணத்தை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கும், ரஜினிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த பிரச்னை சுமுகமாக முடிய மனிதாபிமானத்துடன் எங்களுக்கு உதவிய ரஜினிக்கு திரையுலகின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 கோடி ரூபாய் பணத்தில் யார் யாருக்கு எவ்வளவு பணம் என்று பிரித்துக் கொள்வதில் விநியோகஸ்தர்களுக்கு இடையே கருத்து வேறுபாடும், குழப்பமும் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. சம பங்காக கொடுக்க வேண்டும் என்று சிலரும். நஷ்டத்தை கணக்கிட்டு அதற்கேற்ப கொடுக்க வேண்டும் என்று சிலரும் கருத்து தெரிவித்து வருகிறார்களாம். இதனால் தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.