டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒருவார இடைவெளியில் இவனுக்கு தண்ணில கண்டம், ரொம்ப நல்லவன்டா நீ படங்களைப் பார்த்தவர்கள் நிச்சயம் அதிர்ச்சியடைந்திருப்பார்கள். காரணம் இரண்டு படங்களின் கதையும் ஒன்றே! ஒரே கதையை இரண்டுவிதமான திரைக்கதையில் சொல்லி இருந்தாலும், அடுத்தடுத்த வாரத்தில் இரண்டு படங்களையும் பார்க்க நேர்ந்ததால் இந்த கதை திருட்டு விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. சமீபத்தில் வெளியான படங்களில் இவனுக்கு தண்ணில கண்டம் படம் ஓரளவுக்கு ஓடிக்கொண்டிருக்கிறது. திரையிட்ட தியேட்டர்களில் குறைவில்லாத கூட்டம் இருப்பதாக சொல்கிறார்கள்.
ரொம்ப நல்லவன்டா நீ படத்தின் நிலைமைதான் பரிதாபம். இப்படத்தை திரையிட்ட தியேட்டர்களில் முதல் காட்சியிலிருந்தே கூட்டமில்லை. அதனால் பல தியேட்டர்களில் படத்தை தூக்கிவிட்டனர். எனவே இப்படத்தை மக்கள் பார்த்திருக்க வாய்ப்பில்லை. அதன்காரணமாக கதைத்திருட்டு விவகாரம் ரசிகர்களுக்கு தெரியாமல்போய்விட்டது. ரொம்ப நல்லவன்டா நீ படம் ஓடாமல் போனதற்கு இவனுக்கு தண்ணில கண்டம் படத்தின் கதையை எடுத்ததுதான் காரணம் என்று தயாரிப்பாளர் கடுப்பாகிவிட்டார்.
இதுகுறித்து இயக்குர் வெங்கடேஷிடம் விளக்கம் கேட்டிருக்கிறார். அவரோ, இது டிவிடியிலிருந்து சுட்டகதைன்னு டிரெய்லரிலேயே சொல்லி இருக்கேனே என்று தெனாவெட்டாக பதில் சொன்னாராம். அந்த பதிலைக்கேட்டு தயாரிப்பாளர் அதிர்ச்சியடைந்துவிட்டாராம்.