தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அட்டகத்தி படத்தில் அறிமுகமான கானா பாலா குறுகிய காலத்தில் தமிழ்சினிமாவில் உச்சத்தைத் தொட்டவர். பாடகராக.. பாடலாசிரியராக மட்டுமின்றி நடிகராவும் பிரபலமாகிவிட்டார். அட்டகத்தி படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் பேசியபோது, சினிமா உலகத்தில் ஒழுக்கமாக நடந்து கொண்டு என்னை அறிமுகப்படுத்தியவர்களின் பெயரைக் காப்பேன் என்று பேசினார். அதன்படியே ஆரம்பத்தில் அனைவரிடமும் நற்பெயர் எடுத்தார் கானா பாலா. அவர் பாடிய பாடல்கள் வரிசையாக ஹிட்டாக, நடிகராகவும் அவர் பிரபலமான பிறகு கானாபாலாவிடம் மாற்றம் தெரிய ஆரம்பித்ததாக சொல்லப்பட்டது.
அதிக சம்பளம் கேட்கிறார் என்றும்.... செல்போனில் தொடர்பு கொண்டால் போனை எடுப்பதில்லை என்றும் சொன்னார்கள். இதுபோல் அவர் மீது நெகட்டிவ்வான பல விமர்சனங்கள் சொல்லப்பட்டு வந்தநிலையில் அவரது நல்ல குணத்தைப் பற்றி ஒரு தகவல் கிடைத்தது. ராம்கி ராமகிருஷ்ணன் இயக்கி விரைவில் வெளிவர உள்ள கமர கட்டு படத்தில் இயக்குநரே மூன்று பாடல்களை எழுதி இருக்கிறார். அந்தப்பாடல்களைப் பாட வந்த கானாபாலா இயக்குநரில் பாடல்வரிகளை ரசித்ததோடு பாடல்களைப்பாட பாதி சம்பளம் மட்டுமே வாங்கிக் கொண்டாராம். இவர் கானா பாலா இல்லை... கருணை பாலா!