பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கெளதம்மேனனின் கண்டு பிடிப்புகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில்தான் அவர் அறிமுகமானார். அதையடுத்து செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கவனிக்கப்படும் நடிகையானார் ஆண்ட்ரியா. அப்படியே படிப்படியாக வளர்ந்து வந்த அவர், விஸ்வரூபம் படதில் கமலுடன் நடித்தவர், பின்னர் அப்படத்தின் 2ம் பாகம் மட்டுமின்றி, கமலின் உத்தமவில்லன் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
அதையடுத்து பல படங்களை கைப்பற்றியிருக்கும் ஆணட்ரியாவுக்கு தமிழ் பேசவே தெரியாது என்பதால் ஆங்கிலம் தெரியாத இயக்குனர்கள் அவரை வைத்து படம் பண்ண தயங்கி நின்றனர். இந்த நிலையில், விஸ்வரூபம் படத்தில் நடித்தபோது, ஓய்வு நேரங்களில் அவருக்கு தமிழ் ஆசானாக மாறியிருக்கிறார் கமல்.
விளைவு, அதன்பிறகு படப்பிடிப்பில் உள்ளவர்களிடம் தனக்குத் தெரிந்த தமிழில் பேசத் தொடங்கியிருக்கிறார் ஆண்ட்ரியா. ஆனால் கமல் அவருக்கு சுத்தமான தமிழை கற்றுக்கொடுக்க இவரோ, பின்னர் சென்னைவாசிகளிடம் அதிகமாக பேசிப்பழகியதால், இப்போது சென்னை மக்கள் பேசும் தமிழ்தான் ஆண்ட்ரியாவுக்கு புரிகிறதாம்.
முக்கியமாக, சில டைரக்டர்கள் சுத்த தமிழில் அவரிடம் பேசினால், அந்த வார்த்தைகளில் அர்த்தம் தெரியாமல் தடுமாறுகிறாராம் ஆண்ட்ரியா. அதையடுத்து உதவி இயக்குனர்கள் சென்னை தமிழில் அவருக்கு சொல்லும்போது நன்றாக அதை மைண்டில் ஏற்றிக்கொண்டு நடிக்கிறாராம் ஆண்ட்ரியா.