ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு காலத்தில் தமிழ் இலக்கியம் படித்தவர்களுக்குத்தான் சினிமாவில் பாடல் எழுதுவதற்கு வாய்ப்பு கொடுத்து வந்தனர். அந்த அளவுக்கு பாடல் காலத்துக்கும் அழியாமல் நிற்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அதோடு அப்போதைய படங்களில் கருத்தாழமிக்க கதைகளும், பாடல் எழுதுவதற்கான நல்ல சூழலும் இருந்து வந்தன. அதனால்தான் கண்ணதாசன், பட்டுக்கோட்டை காலத்து பாடல்கள் இன்றுவரை அழியாமல் மக்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஆனால், சமீபகாலமாக திரையிசை பாடல்களின் நிலை பரிதாபத்திற்குரியதாகி விட்டது. தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் என்கிற ரேஞ்சில் போய்க்கொண்டிருக்கிறது. அதிலும் இலக்கண பிழை இல்லாமல் எழுதுவர்களைகண்டாலே கிணடல் செய்யும் காலமாகி விட்டது. மாறாக, குண்டக்க மண்டக்க எழுதினால் அதுதான் இப்போதைய டிரண்ட் என்று கூறி அந்த மாதிரியான பாடலாசிரியர்களுக்கே பலத்த வரேவ்றபு கொடுத்து வருகிறார்கள்.
அந்த வகையில், அட்டகத்தி படத்தில் ஆடி போனா ஆவணி, நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா? போன்ற ஹிட் பாடல்களை பாடிய கானா பாலா, கடந்த சில ஆண்டுகளாகவே உச்சத்தில் இருந்தார். முதலில் பாட்டு பாடி வந்தவர், பின்னர் எழுதி பாடினார். அதையடுத்து திரையில் தோன்றி பாடல் காட்சிகளில் நடனமும் ஆடினார். ஆக குறுகிய காலத்தில் வியத்தகு வளர்ச்சி அடைந்தார் கானா பாலா.
இந்த நிலையில், அனேகன் படத்தில் டங்காமாரி என்ற பாடலை எழுதிய ரோகேஷ் தற்போது கோலிவுட்டில் வேகமாக வளரத் தொடங்கியிருக்கிறார். அவர் தங்கள் இசையில் பாடல் எழுதினார் அந்த பாட்டு சூப்பர் ஹிட் என்று நினைத்து சில முன்னணி இசையமைப்பாளர்களே அவரை நாடி வருகின்றனர். அதனால், சென்னை பாஷையில் இன்னும் ஒளிந்து கிடக்கும் கூவத்து வார்த்தைகளை கோர்த்து பாடல்கள் எழுதி வருகிறார் ரோகேஷ்.
இதன்காரணமாக டாப் கியரில் சென்று கொண்டிருந்த கானா பாலாவின் மார்க்கெட் தடாலடியாக இறங்கி விட்டது. அவர் பின்னாடி சென்று கொண்டிருந்தவர்களெல்லாம் போது ரோகேஷ் பின்னாடி க்யூவில் நிற்கின்றனர். ஒரு பாட்டுக்கு ஒரு லட்சம் என்ற அவர் கேட்டபோதும் அதை மறுக்காமல் கொடுத்து பாடல்கள் எழுத வைத்து வருகின்றனர். அதேசமயம், அனேகனுக்கு முன்பு வரை ஒரு பாட்டுக்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய கானா பாலா, தன்னை தக்க வைத்துக்கொள்வதற்காக இப்போது 50 சதவிகிதம் தள்ளுபடி செய்திருக்கிறார்.