பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தயாரிப்பாளர் ஆண்டோ ஜோசப்.. சின்ன வயதுக்காரர் தான். ஆனால் மலையாளத்தில் தயாரிப்பது எல்லாம் படா படா படங்கள் தான்.. மம்முட்டி, திலீப், துல்கர், பஹத் பாசில் என முன்னை நடிகர்களின் படங்களை தயாரிக்கவே இவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. கிடைத்த கேப்பில் நம்ம ஊர் சசிகுமார் வைத்து தமிழில் 'பிரம்மன்' படத்தை தயாரித்ததும் இவர் தான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் மம்முட்டி திலீப் இருவரையும் இணைத்து 'கம்மத் அண்ட் கம்மத்' என்கிற படத்தை தயாரித்ததோடு அதில் தனுஷையும் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து மலையாள திரையுலகை வாய்பிளக்க வைத்தார்.
சரி விஷயத்திற்கு வருவோம்.. தற்போது மம்முட்டியை வைத்து 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தையும் திலீப்பை வைத்து 'இவன் மர்யாதராமன்' படத்தையும் ஒரே நேரத்தில் தயாரித்து வருகிறார். இதைவிட ஆச்சர்யம் திலீப் படத்தை ஏப்ரல்-4ஆம் தேதியும், மம்முட்டி படத்தை ஏப்ரல்-14 ஆம் தேதியும் என வெறும் 12 நாட்கள் இடைவெளியில் ரிலீஸ் செய்யும் ரிஸ்க்கையும் எடுத்துள்ளார் ஆண்டோ ஜோசப். காரணம் திலீப், மம்முட்டி மற்றும் இயக்குனர்கள், கதைகள் மீது அவர் வைத்திருக்கும் அசைக்கமுடியாத நம்பிக்கைதான்.
இங்கே நம்ம ஊரில் பழம் தின்று கோட்டை போட்ட ஆஸ்கர் பிலிம்ஸ் கூட தங்களது அடுத்தடுத்த படங்களுக்கு மூன்று மாதமாவது இடைவெளி விடும் சூழலில் ஆண்டோ ஜோசப்பின் தைரியத்தை மலையாள தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும் ஆச்சர்யத்துடன் தான் பார்க்கின்றனர்.