'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் ஏழாம் அறிவு, 3, பூஜை படங்களில் நடித்த ஸ்ருதிஹாசன், இப்போது விஜய்யுடன் புலியில் நடித்துக்கொண்டிருக்கிறார். அதோடு, தெலுங்கு,. இந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார். ஆக அவரது கால்சீட் டைரி எப்போதும் புல்லாகவே உள்ளது.
மேலும், இந்த படங்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்து நடிக்கும் படங்களுக்கான கதைகளையும் அவ்வப்போது டைரக்டர்களை ஸ்பாட்டுக்கு வரவைத்து கேட்கிறார் ஸ்ருதிஹாசன். அப்படி கேட்கும் கதைகளை அவர் உடனே ஓகே செய்வதில்லை. என்னோட முடிவை அப்புறமா சொல்றேன் என்று அவர்களை அனுப்பி விடுகிறார்.
அதையடுத்து, தனது தந்தையான கமலிடம் தான் கேட்ட கதைகளை சொல்லி அவரிடம் கருத்து கேட்கிறாராம். அப்போது அவர் சொல்லும் கருத்தைப் பொறுத்தே எந்தெந்த கதைகளில் நடிப்பது என்று முடிவு செய்கிறாராம் ஸ்ருதி. மேலும், தெலுங்கு, இந்தி படங்களுக்கே கூடுதல் முன்னுரிமை கொடுத்து வந்த ஸ்ருதியை, தமிழில் அதிக படங்களில் நடிக்குமாறு கமல் சொன்ன பிறகுதான் தன்னைத்தேடி வந்த படங்களை ஏற்றுக்கொள்ளத் தொடங்கினாராம்.