ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
2015ம் ஆண்டு நடிகைகளுக்குள் பலத்த போட்டி ஏற்படுவது உறுதி. ஒவ்வொரு ஹீரோயினுமே பல பெரிய படங்களைத் தங்கள் வசமாக்கியிருப்பதுதான் அதற்குக் காரணம். நயன்தாரா கையில் தற்போது ஆறேழு படங்கள் உள்ளன. ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்தால் கூட இந்த ஆண்டில் நயன்தாரா நடிக்கும் படங்கள்தான் அதிகம் வெளிவரும். அவற்றில் சூர்யாவுடன் 'மாஸ்', விஜய் சேதுபதியுடன் 'நானும் ரௌடிதான்' ஆகியவை குறிப்பிட வேண்டியவை. நயன்தாராவின் படங்களில் முதலில் 'நண்பேன்டா' படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ளது.
அடுத்து ஹன்சிகா விஜய்யுடனும், ஜெயம் ரவியுடனும் நடித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் விஜய்யுடனும், அடுத்து அஜித்துடனும் நடிக்க உள்ளார். எமி ஜாக்சன் தனுஷுடனும், உதயநிதி ஸ்டாலினுடனும் நடித்து வருகிறார். சமந்தா விக்ரமுடனும், அடுத்து விஜய்யுடனும் நடிக்க உள்ளார். காஜல் அகர்வால் தனுஷுடனும், விஷாலுடனும் நடித்து வருகிறார். அடுத்து விக்ரமுடன் நடிக்க உள்ளார். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஒவ்வொரு முன்னணி ஹீரோயின்கள் கையிலும் சில முக்கியமான படங்கள் உள்ளன. அதனால், இந்த ஆண்டில் யார் முன்னணியில் வரப் போகிறார்கள் என்பதில் பலத்த போட்டி இருக்கும். கடந்த ஆண்டில் ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்த காஜல் அகர்வால் இந்த ஆண்டில் மெதுவாக மூன்று படங்களைக் கைப்பற்றி விட்டார். படங்கள் வெற்றி பெறும் போது யார் முதலிடத்தைப் பிடிக்கப் போகிறார்கள் என்பது தெரிந்து விடும்.