இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
என்னை அறிந்தால் படத்தை நான் தியேட்டரில் சென்று பார்த்தபோது அஜித் வந்ததும் ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். அதனால் நான் அவரது ரசிகையாகவே கங்காரு படத்தில் நடித்திருப்பதால் எனக்கும் அவரை வைத்து நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று நினைக்கிறேன் என்கிறார் கங்காரு பிரியங்கா.
தினமலர் இணையதளத்திற்காக அவருடன் ஒரு சந்திப்பு...
கங்காரு படத்தில் நடித்த அனுபவம் பற்றி?
கங்காரு படம் அண்ணன்-தங்கையின் பாசப்போராட்டத்தை மையமாகக் கொண்ட படம். அண்ணன் தங்கை கதை என்றாலே நமக்கெல்லாம் சிவாஜி-சாவித்ரி நடித்த பாசமலர்கள் படம்தான் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட ஒரு கதையை இன்றைய பாணியில் அற்புதமாக படமாக்கியிருக்கிறார் டைரக்டர் சாமி. இந்த படத்தின் கதையை சாமி சார் சொன்னபோதே, பாசமலர்கள் போன்ற அண்ணன் தஙகை பாசம்தான் என் மனக்கண்ணில் ஓடியது. அப்போது இந்த தங்கை வேடத்தில் நீதான் நடிக்கிறாய் என்று டைரக்டர் சொன்னபோது ரொம்ப சந்தோசமாக இருந்தது.
அதையடுத்து கொடைக்கானலில் படப்பிடிப்பு நடந்தது. நானும், எனக்கு அண்ணனாக நடித்துள்ள அர்ஜூனாவும் ரொம்ப இயல்பாக நடித்தோம். படப்பிடிப்பு தளத்திலேயே எனது நடிப்பைப்பார்த்து டைரக்டர் சாமி சார் ஷோபா மாதிரி நடிக்கிறாய் என்று என்னை பாராட்டினார். அது எனக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்தது., அதனால் கதையில் முழு ஈடுபாடு காட்டி நடித்தேன்.
இப்போது அந்த படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதால், நான் சந்திக்கும் நபர்கள் அனைவருமே கங்காரு எப்போது வருகிறது என்றுதான் கேட்கிறார்கள். ஆக, ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்போடு கங்காரு மிகப்பெரிய வெற்றி பெற்று எனது சினிமா கேரியரில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்.
இதன்பிறகு எந்த மாதிரி கதைகளுக்கு முதலிடம் கொடுப்பீர்கள்?
கங்காரு எனது திறமைக்கு பெரிய சவாலாக அமைந்த படம் என்பதோடு அதில் எனது கதாபாத்திரத்தில் சிறப்பாகவே நடித்திருக்கிறேன். அதனால் இதன்பிறகும் வெயிட்டான வேடங்களுக்கே முதலிடம் கொடுப்பேன். கூடவே முன்னணி ஹீரோக்களின் படங்களையும் எதிர்பார்க்கிறேன். கங்காரு படம் திரைக்கு வரும்போது என்னைத்தேடி நான் எதிர்பார்க்கிற அந்த வாய்ப்புகள் வரும் சூழல் இப்போதே தெரிகிறது. அதனால் அதன்பிறகு தமிழ் சினிமாவில் எனக்கான இடம் கண்டிப்பாக கிடைக்கும்.
டைரக்டர் சாமி ரொம்ப டென்சன் பார்ட்டியாச்சே?
இந்த படத்தைப்பொறுத்தவரை மற்றவர்கள் பயமுறுத்தியது போல் அவர் இல்லை. டோட்டலாக மாறிப்போயிருந்தார். முக்கிமாக அவர் எதிர்பார்க்கிற மாதிரி நாம நடிச்சோம்னா அவர் டென்சனாகவே மாட்டார். ரொம்ப சாப்ட்டாகவே இருப்பார். அதோடு அவர் நினைத்த மாதிரியே நடித்து விட்டால் தட்டிக்கொடுப்பார். அந்த வகையில் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தி நடிக்க வைத்த நல்ல டைரக்டர் சாமி சார்.
மேலும், கங்காரு படத்தில் நான் நடித்த முதல் நாளிலேயே, உனக்கு நன்றாக நடிக்கத் தெரியும் என்பது எனக்கு தெரிந்து விட்டது. அதனால் நான் கேட்கிறபோது தேவையான அளவு நடிப்பை வெளிப்படுத்தினால் மட்டுமே போதும் என்று சொன்னார். முக்கியமாக சில காட்சிகளில் நடித்தபோது இந்த காட்சிக்கு இவ்வளவு நடிப்பு தேவையில்லை. குறைவாக நடித்தாலே போதும் என்று என்னை கம்மி பண்ணியே நடிக்கச்சொன்னார் டைரக்டர்.
படத்தில் அழுகாச்சி சீன் நிறைய இருப்பதாக கூறப்படுகிறதே?
நிறைய இல்லை. கொஞ்சம் சீன் இருக்கிறது. அந்த காட்சிகளில் நான் கிளிசரின் போடாமலேயே அழுதிருக்கிறேன். காரணம், டைரக்டர் காட்சியை சொல்லும்போதே எனக்கு கடகடவென அழுகை வந்துவிடும். குறிப்பாக, கங்காரு படத்தில் ஒரு காட்சியில் எனது லவ்வர் இறந்து விட்டதாக செய்தி வரும். அதைக்கேட்டு கொடைக்கானல் மலையில் இருந்த நான் படிக்கட்டுகளில் ஓடிவந்து கீழே வரும்போது வழுக்கி விழுந்து விடுவேன். அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் நான் நிஜமாலுமே வழுக்கி விழுந்தேன்.
ஆனால் டைரக்டர் வழுக்கி விழ வேண்டும் என்று சொல்லவில்லை. ஓடி வந்தால் மட்டும்போதும் என்றுதான் சொன்னார். ஆனால் நான் எமோசனல் அதிகமானதால் என்னையுமறியாமல் விழுந்து விட்டேன். அந்த கதாபாத்திரமாக நான் மாறி நடித்ததால் அப்படி நடந்து விட்டது. அந்த இன்வால்வ்மென்டுதான் எனக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.
மேலும், அந்த சீனில் நடித்து முடித்தபோது எனக்கு எதுவுமே தெரியவில்லை. ஒரு படியில் போய் உட்கார்ந்து விட்டேன். ஆனால் ஒரே டேக்கில் அந்த காட்சி ஓகேவாகி விட்டதால் அனைவரும் கைதட்டினார்கள். அப்போது எனக்கு கண்ணில் தண்ணீர் வந்து விட்டது.
அடுத்து எந்த மாதிரி கதைக்கு முதலிடம் கொடுப்பீர்கள்?
சாதாரணமாக இல்லாமல் சேலஞ்சிங்கான வேடங்களைத்தான் எதிர்பார்க்கிறேன். கங்காரு போன்ற வெயிட்டான கதையில் நடித்து விட்ட எனக்கு அடுத்து இதைவிட வெயிட்டான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம்தான் உள்ளது. அதுவும் மிகப்பெரிய நடிகை ஷோபாவுடன் என்னை ஒப்பிட்டு பேசியதை அடுதது, அவரை மாதிரி ஒரு நடிகையாக நடித்து அவர் விட்டுச்சென்ற இடத்தை நிரப்ப வேண்டும் என்ற ஆசைதான் எனக்கு உள்ளது. அதற்கான சூழ்நிலையை காலம் உருவாக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
அடுத்தடுத்து டூயட் பாட ஆசைப்படும் ஹீரோக்கள்?
எல்லா ஹீரோக்களுடனும் டூயட் பாட வேண்டும் என்பதுதான் எனது ஆசையே. விஜய் ஒரு ஸ்டைல் என்றால், அஜித் இன்னொரு ஸ்டைல், சூர்யா வேறு மாதிரியான ஸ்டைல். ஆக ஒவ்வொருத்தரிடமும் ஒரு தனித்துவம் உள்ளது. அதனால் அவர்கள் அனைவருடனும் நடித்து பெரிய நடிகையாக வேண்டும் என்பதுதான் எனது விருப்பமே.
மேலும், எல்லாவிதமான கதைகளையும், எல்லாவிதமான நடிகர்களையும் ரசித்தால்தானே நடிகையாக முடியும். அதனால் அனைவரது நடிப்பையும் நான் ரசித்திருக்கிறேன். என்றாலும் அதிகம் பிடித்தமான ஹீரோ என்று சொல்லவேண்டுமென்றால் அஜித்தான். கங்காரு படத்தில்கூட நான் தலயோட ரசிகையாகத்தான் நடிக்கிறேன். அவரை பிடிக்காமல் யாருமே இருக்க முடியாது. அதனால் எல்லாரையும் பிடிக்கும். எல்லார்கூடயும் நடிப்பேன்.
அதோடு, என்னை அறிந்தால் படத்தை நான் தியேட்டரில் சென்று பார்த்தபோது அஜித் வந்ததும் ரசிகர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர். அதனால் நான் அவரது ரசிகையாகவே கங்காரு படத்தில் நடித்திருப்பதால் எனக்கும் அவரை வைத்து நிறைய ரசிகர்கள் கிடைப்பார்கள் என்று நினைக்கிறேன்.
பெரிய ஹீரோ படமென்றால் கிளாமர் காட்சிகளில் நடிக்க வேண்டுமே?
கதைக்கு அவசியம் என்றால் கண்டிப்பாக நடிப்பேன். டைரக்டர்கள் இந்த காட்சிக்கு இந்த மாதிரி உடையணிந்து நடிக்க வேண்டும் என்று சொன்னால் அதன்படி நடிப்பேன். அந்த வகையில், அனுஷ்கா, தமன்னா, காஜல்அகர்வால் போன்று நானும் கிளாமராக நடிப்பேன். அப்படி நடித்து டைரக்டர்களின் நடிகை என்ற பெயரையும் பெறுவேன்.
மேலும், முத்தக்காட்சியில் நடிப்பது பற்றி இதுவரை நான் முடிவெடுக்கவில்லை. ஆனால் கதைக்கு அவசியம் என்று டைரக்டர்கள் பீல் பண்ணினால் கட்டாயம் நடிப்பேன். எதுவாக இருந்தாலும் கதைதான் தீர்மானிக்க வேண்டும்.
உங்கள் ரோல் மாடல் நடிகை யார்?
ஸ்ரீதேவி மேடம். அவர் நடித்த மூன்றாம்பிறை படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த வகையில், அவர் என்னை அதிகமாக பாதித்த நடிகை. இப்போது அவர் தமிழில் புலி படத்தில் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். அதனால் எதிர்காலத்தில் அவருடனும் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது.
உங்களைப்பற்றி கிசுகிசுக்கள் வரவில்லை ஏன்?