ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
யுத்தம் செய் படத்தில் டைரக்டர் மிஷ்கினால் அறிமுகம் செய்யப்பட்டவர் இசையமைப்பாளர் கே. அந்த படத்தில் அவரது இசையில் உருவான கன்னித்தீவு பொண்ணா என்ற பாடல் சூப்பர் ஹிட்டானது. அப்பாடலில் அமீர்- நீத்து சந்திரா இருவரும் நடனமாடியிருந்தனர்.
அதையடுத்தும், மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்துக்கு இசையமைத்த கே, சமீபத்தில் காடு படத்தில் மெலோடியான பாடல்களை கொடுத்திருந்தவர் தற்போது 49ஓ, கள்ளப்படம், கிருமி போன்ற படங்களுக்கும் இசையமைத்துக்கொண்டிருக்கிறார்.
இதில் கள்ளப்படம் படத்தில் இசையமைப்பதோடு, இசையமைப்பாளர் கேரக்டரிலும் நடித்திருக்கிறார் கே. இப்படத்தில் இடம்பெற்றுள்ள வெள்ளக்கார ராணி கொல்லிமலைத்தேனி என்று மிஷ்கின் பாடிய பாடலை, கன்னித்தீவு பொண்ணா பாடல் போன்றே கம்போஸ் செய்திருக்கிறார்.
இந்நிலையில், அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தபோது, அதுகுறித்து நிருபர்கள் கேவிடம் கேட்டனர். அப்போது சற்று தடுமாறிய அவர், இந்த படத்தின் இயக்குனர் வடிவேலு, மிஷ்கினின் உதவியாளர் என்பதால், அந்த சாயலிலேயே டியூனை ஓகே செய்து விட்டார். அதனால்தான் பாடல் அந்த சாயலில் உள்ளது என்று சமாளித்தார்.
அதையடுத்து, அவரிடமிருந்து மைக்கை வாங்கி பேசிய டைரக்டர் வடிவேலு, நான் மிஷ்கினின் உதவியாளர் என்பதால் அவர் பட சாயலில் ஒரு பாடல் வைக்க எண்ணினேன். அதனால்தான் அந்த பாணியிலேயே இந்த பாடலை ஓகே செய்தேன் என்று கேவுக்கு சாதகமாக பேசினார். மேலும், இந்த வெள்ளகார ராணி பாடல்தான் கன்னித்தீவு பொண்ணா பாடல் போன்று உள்ளது என்றால், பாடலின் நடனமும் முந்தைய பாடலைப்போன்ற அமைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.