Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழம்பெரும் நடன கலைஞர் உடுப்பி லட்சுமி நாராயணன் காலமானார்

17 மார், 2015 - 14:54 IST
எழுத்தின் அளவு:
Dancer-Udupi-Laxmi-narayanan-passes-away

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளி்ட்ட தென்னிந்திய மொழிகளில், 250க்கும் மேற்பட்ட படங்களில் நடன ஆசிரியராக பணியாற்றிய உடுப்பி லட்சுமி நாராயணன், மூச்சுத்திணறல் காரணமாக இன்று காலமானார்.


1926ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி, உடுப்பி லட்சுமிநாராயணன் பிறந்தார். சிறுவயதிலேயே நடனம் மீது ஈடுபாடு கொண்டிருந்த உடுப்பி லட்சுமி நாராயணன், பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கினார். காஞ்சிபுரம் ஸ்ரீ எல்லாப்ப முதலியாரிடம் அவர் முறைப்படி நடனம் பயின்றார். 1962ம் ஆண்டு பரதநாட்டிய மஞ்சரி என்ற பெயரில் நடன பள்ளியை துவக்கினார். பின்னர், அதன் பெயர் நாட்டிய மஞ்சரி என்று பெயர் மாற்றப்பட்டது.


நடிகர் சிவாஜி கணேசனின் நாடக மன்றத்தில் நடன மாஸ்டராக பணியாற்றி வந்தார் நாராயணன். பின்னர் சிவாஜியே பங்களுக்கும் நடனம் அமைக்க சொல்லி கேட்டு கொண்டதற்கு இணங்க சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக மாறினார். முதன் முதலில், சுமதி என் சுந்தரி என்ற படத்திற்கு நடன அமைத்த நாராயணன், தொடர்ந்து கௌரவம், பொன்னூஞ்சல், உழைக்கும் கரங்கள், பாட்டும் பரதமும், பிரபுதேவா நடித்த காதலன் உள்ளிட்ட பல படங்களுக்கு நடன ஆசிரியராக பணியாற்றினார்.


தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, கொங்கனி உள்ளிட்ட பல மொழிகளிலும் பணியாற்றியுள்ளார். சினிமாவில் மட்டும் சுமார் 250க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன ஆசிரியராக இருந்துள்ளார். சினிமா தவிர்த்து இந்தியாவின் பல ஊர்களிலும், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளிலும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருது, கர்நாடக அரசின் விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.


சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த நாராயணனுக்கு இன்று காலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் அவரது உயிர் பிரிந்தது. நாராயணனுக்கு லீலாவதி என்ற மனைவியும், பிரபாவதி, கலாவதி, ஹேமாவதி, முரளி கிருஷ்ணா, மதுமதி என ஐந்து வாரிசுகளும் உள்ளனர். நாராயணன் நடத்தி வந்த நாட்டிய மஞ்சரியை, தற்போது அவரது மகள் மதுமதி நடத்தி வருகிறார்.


நாராயணனின் உடல், அஞ்சலிக்காக சென்னையில் உள்ளது அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதிசடங்கு நாளை(மார்ச் 18ம் தேதி) காலை 8.00 மணியளவில் விருகம்பாக்கத்தில் உள்ள மயானத்தில் நடைபெற இருக்கிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in