அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? |
சமீபகாலமாக சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகள் திருமணம் செய்து கொண்டு கர்ப்பமாகி விடுவதால் சீரியலை தொடர்வதில் தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் சவால்களை எதிர் கொள்கின்றன. பொன்னூஞ்சல் தொடரில் நடித்துக் கொண்டிருந்த சேது அபிதா இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆனதால் குழந்தை பெற்றுக் கொள்ள சொந்த ஊரான கேரளாவுக்கு சென்று விட்டார். தற்போது அவருக்கு பதிலாக ஷமிதா நடித்து வருகிறார்.
அதேபோல மெட்டிஒலி சீரியலுக்கு பிறகு தற்போது எஸ்.பி.பி. சரணுடன் நடித்து வரும் காயத்திரி, திருமணமாகி நீண்ட வருடங்களுக்கு பிறகு கர்ப்பம் என்பதால் சீரியலுக்கு குட்பை சொல்கிறார். இதனால் காயத்ரி சம்பந்தப்பட்ட காட்சிகளை அவசர அவசரமாக எடுத்து வருகிறார்கள். அவருக்கு பதிலாக வேறு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். காயத்திரியின் தங்கையாக நடிக்கும் வைஜெயந்தி சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவரும் தற்போது கர்ப்பமாக இருக்கிறார், இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் தர்ஷினியும் கர்ப்பமாக இருக்கிறார். இவர்கள் மூவருமே தொடரிலிருந்து விலகுகிறார்கள். மூன்று பேருக்கும் பதிலாக வேறு நடிகைகளை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.