ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விவகாரத்து பெற்ற பின் மலையாள நடிகர் திலீப்பும் நடிகை மஞ்சு வாரியரும் ஒருவரை ஒருவர் தாக்கி எந்தவித கருத்துகளும் சொல்லாமல் அமைதியாகவே தங்களது வேலைகளை பார்த்து வருகிறார்கள். அந்த வகையில் “என் மகள், அவள் யாரிடம் இருக்க விரும்புகிறாளோ இருக்கட்டும். அவள் திலீப்புடன் இருக்கிறேன் என்று சொன்னாலும் நான் அதற்காக சண்டைபோட மாட்டேன். என்னிடம் இருப்பதை விட பத்திரமாகவே அங்கே இருப்பாள். அவள் விரும்பும்போது என் வீட்டிற்கு வந்து பார்த்துக்கொள்ளட்டும்” என்று முன்பே கூறிவிட்டார் மஞ்சு வாரியர்.
அதேபோல் இன்னொரு திருமணம் குறித்த திலீப்பின் நிலைப்பாடு என்ன என்பதை சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றின் மூலம் காண முடிந்தது. அதாவது எதிர்காலம் குறித்த எதையும் திட்டமிட்டுக்கொள்ளவில்லை என்றும், எதிர்காலத்தில் இன்னொரு திருமணம் செய்தாலும் செய்யலாம், அல்லது செய்யாமலும் போகலாம் என்று பொத்தாம் பொதுவாக கூறியுள்ளார். மேலும் தங்களது பிரிவிற்கு வேறு ஒரு நடிகை தான் காரணம் என்றும் அந்த நடிகையைத்தான் திருமணம் செய்யப்போகிறார் என கிளம்பியுள்ள வதந்தியையும் கடுமையாக மறுத்துள்ள திலீப், இதுகுறித்து அவதூறு செய்தி வெளியிட்டவர்கள் மீது சைபர் க்ரைமிலும் புகார் கொடுத்துள்ளார்.