ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜிகர்தண்டா வில்லன் பாபி சிம்ஹா, தற்போது சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது படத்தில் ஹீரோவாக நடித்து முடித்து விட்டார். அதையடுத்து உருமீன், பாம்பு சட்டை, இறைவி, மசாலா படம் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்த படங்களில் ஒரே மாதிரியாக இல்லாமல் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரியான கேரக்டரில் நடித்து வருகிறார். அதேசமயம் நெகட்டிவ் வேடங்களில் நடித்தால் மீண்டும் வில்லத்தனம் ஒட்டிக்கொள்ளும் என்பதால், அனைத்து படங்களிலுமே பாசிட்டிவ் ஹீரோவாகவே நடித்து வருகிறார்.
இதில், பாம்பு சட்டை படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இன்னும் இரண்டு நாட்களில் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. ஆரம்பத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே கீர்த்தி சுரேசுடன் நடித்த பாபி சிம்ஹா, இனிமேல்தான் ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்கப்போகிறார். என்னதான் அதிரடியான வில்லன் என்றாலும், நடிகையுடன் நெருக்கமாக நடிக்க வேண்டும் என்றதுமே வேர்த்து விறுவிறுத்துப் போகிறாராம் பாபி சிம்ஹா.
அதனால், ரொமான்ஸ் காட்சிகள் இயல்பாக வர வேண்டும் என்பதற்காக, ஆரம்பத்தில் அவர்கள் சம்பந்தப்பட்ட வசன காட்சிகளை படமாக்கி விட்டு, பின்னர் நெருக்கமான ரொமான்டிக் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். தற்போது சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் படத்துக்காக மதுரையில் முகாமிட்டுள்ள கீர்த்தி சுரேஷ், இன்னும் சில தினங்களில் பாபிசிம்ஹாவுடன் ரொமான்ஸ் செய்வதற்காக சென்னை வருகிறார்.