விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
ஐ படத்தை முடித்துவிட்டு தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் 10 எண்றதுக்குள்ளே படத்தில் நடித்து வருகிறார் விக்ரம். ஐ படம் வெளியாவதற்கு முன்பே 10 எண்றதுக்குள்ளே படப்பிடிப்பில் கலந்து கொண்ட விக்ரம் கடந்த 3 மாதங்களாக இப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். 10 எண்றதுக்குள்ளே படத்தை முடித்துவிட்டு, கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும், அரிமா நம்பி பட இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இவற்றில் கௌதம் மேனன் இயக்கும் படம் ஜூன் மாதம்தான் தொடங்குகிறது. அதற்கு முன் ஆனந்த் சங்கர் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப்படத்துக்கு மர்ம மனிதன் என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். இந்த தலைப்பை வேறு யாரும் பதிவு செய்யாமல் இருந்தால், இந்த தலைப்பே இறுதியானதாக இருக்குமாம். வேறு யாராவது இதே தலைப்பை ஏற்கனவே பதிவு செய்து வைத்திருந்தால் வேறு தலைப்பை சூட்டுவார்களாம்.