ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
நடிகர் முரளியின் தந்தையும், பழம்பெரும் கன்னட சினிமா டைரக்டருமான எஸ்.சித்தலிங்கய்யா, பன்றிக்காய்ச்சல் காரணமாக காலமானார். 'மேயர் முத்தண்ணா', 'பங்காரத மனுஷ்ய' மற்றும் 'பூதய்யனு மக அய்யு' உள்ளிட்ட பல கன்னட வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.சித்தலிங்கய்யா (79). சில நாட்களுக்கு முன்பு பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சித்தலிங்கய்யா, சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் சித்தலிங்கய்யாவின் உடல் உறுப்புகள் செயலிழந்தன. சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். சி்த்தலிங்கைய்யாவின் உடலுக்கு முதல்வர் சித்தராமைய்யா நேரில் அஞ்சலி செலுத்தினார். கன்னட திரை உலகத்தை சேர்ந்த நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.