தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
மலையாளத்தில் தற்போது நடிக்கும் 'ருத்ர சிம்ஹாசனம்' படத்திற்காக ஒரு 'ஹேமாவதி தம்புராட்டி'யாக மாறியிருக்கிறார் நம்ம 'டார்லிங்' நிக்கி கல்ராணி. சுரேஷ்கோபி கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தை சிபு கங்காதரன் என்பவர் இயக்குகிறார். இந்தப்படத்தில் நிக்கியுடன் நடித்துள்ள இன்னொரு கதாபாத்திரம் தேவிதத்தன். ஆம்.. நாற்பது வயதான தேவிதத்தன் ஒரு யானை..
இந்த யானையுடன் மிக நெருக்கமான பாசத்தை வளர்த்துக்கொண்டு விட்டார் நிக்கி கல்ராணி. ஷூட்டிங்ஸ்பாட்டிற்குள் நுழைந்ததுமே யானையின் முகத்தில் தான் கண் விழிப்பாராம். தனது காட்சிகள் எடுக்கும் நேரம் போக, மீதி நேரங்களில் அந்த யானையின் அருகிலேயே ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்துவிடுவாராம்.