ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சித்தார்த் நாயகனாக நடித்த '180' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நித்யா மேனன். அந்தப் படத்திற்குப் பிறகு அவர் நடித்த 'மாலினி 22 பாளையம்கோட்டை' படம் கடந்த ஆண்டிலும், மூன்றாவது படமான 'ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை' படம் கடந்த வாரம் டிவிடியிலும் வெளியானது. தற்போது ரோகிணி இயக்கத்தில் 'அப்பாவின் மீசை' படத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் 'ஓ காதல் கண்மணி' படத்திலும், ராகவா லாரன்ஸ் இயக்கியுள்ள 'காஞ்சனா 2' படத்திலும் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்தப் படங்கள் வெளியாக உள்ளன.
ஆனாலும், தமிழில் இதுவரை வெற்றிகரமான ஒரு நாயகியாக நித்யா மேனன் வரவில்லை. இப்போது அடுத்தடுத்து 'ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2' ஆகிய இரண்டு பெரிய படங்கள் வெளிவர உள்ளன. இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ளது. மணிரத்னம் படத்தில் அவருடைய வழக்கமான துறுதுறுப்பான கதாநாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். 'காஞ்சனா 2' படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம், அதாவது அவர்தான் படத்தில் பேயாக வருகிறார் என்கிறார்கள். படத்தைப் பார்த்த பின் நமது நினைவுகளில் அந்தப் பேய்தான் அடிக்கடி வந்து பயமுறுத்தும் என்கிறார்கள்.
தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ள நித்யா மேனன் மலையாளத்திலும், தெலுங்கிலும் நிறையவே பேர் வாங்கியுள்ளார், ஆனால், இது வரை தமிழில் அவருக்குக் கிடைக்காத பெயரை இனி வரப்போகும் படங்கள் கொடுத்து அவரைக் கண்டிப்பாக நினைவில் நிற்க வைக்கும் என்பது மட்டும் உறுதி.