600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தனது பாடல்களை தனியார் ஆடியோ நிறுவனங்கள் சட்டவிரோமாக ஒலிபரப்புவதாகவும், விற்பனை செய்வதாகவும் இளையராஜா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 6 ஆடியோ நிறுவனங்களுக்கு கோர்ட் நிரந்தர தடை விதித்தது. உடனடியாக இளையராஜா தன் பாடல்களின் உரிமங்களை தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொடுத்தார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு, துணை தலைவர் கதிரேன், செயலாளர் டி.சிவா, ராதாகிருஷ்ணன், பொருளாளர் டி.ஜி.தியாகராஜன் ஆகியோர் திருட்டு விசிடி தடுப்பு பிரிவு எஸ்.பி.ஜெயலட்சுமியை சந்தித்து தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும், இளையராஜா சார்பிலும் புகார் மனு ஒன்றை அளித்தனர். இளையராஜா சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
நான் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளராக இருக்கிறேன். என்னுடைய பாடல்களை முறையான அனுமதி இன்றி விற்பனை செய்பவர்கள், எனது அனுமதி பெற்றிருந்தாலும் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் விற்பனை செய்பவர்கள், எனது அனுமதி பெற்றிருப்பதாக பொய் சொல்லி விற்பனை செய்கிறார்கள். சென்னை கடைகளில் வீடியோ மற்றும் ஆடியோவாக எனது பாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் எனக்கு பல்வேறு வகையில் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க மனுவில் "இளையராஜவின் பாடல்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதால் அவர் இசை அமைத்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.