ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
வல்லவனுக்கு புல்லும்ஆயுதம் படத்தை அடுத்து, ''இனிமேல் இப்படித்தான்'' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் சந்தானம், முன்பு மாதிரி நிறைய படங்களில் காமெடியனாக நடிப்பதை தவிர்த்து வருகிறார். குறிப்பாக முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு மட்டுமே ஓகே சொல்லும் அவர், அரண்மனை, ஐ, லிங்கா, ஆம்பள படங்களுக்குப்பிறகு தன்னைத்தேடி பல படங்கள் வந்தும் திருப்பி அனுப்பி விட்டார்.
அந்த வகையில், தற்போது உதயநிதியுடன் நண்பேன்டா படத்தில் நடித்து விட்டு, ஆர்யாவுடன் வாசுவும சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் காமெடியன் என்றபோதும், ஆர்யா டூயட் பாடும் காட்சிகளை தவிர அனைத்து காட்சிகளிலும் இவரும் அவருடன் வருகிறாராம்.
இந்தநிலையில், தான் கார்த்தியை வைத்து இயக்கிய சிறுத்தை படத்தில் சந்தானத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த ரைக்டர் சிவா, அஜீத்தை இயக்கிய வீரம படத்தில் சந்தானத்துக்கு குறைவான காட்சிகளே கொடுத்திருந்தார். ஆனால், அடுத்தபடியாக அஜீத்தை இயக்கும் புதிய படத்தில் சந்தானத்தின் காமெடிக்கு அதிக காட்சிகளை ஒதுக்கியுள்ளாராம் சிவா. அந்த வகையில், ஆர்யா, உதயநிதியுடன் படம் முழுக்க வருவது போன்று, இந்த படத்தில் அஜீத்துடனும் படம் முழுக்க வருகிறாராம் சந்தானம். அதேசமயம், மற்ற ஹீரோக்களை கலாய்ப்பது போல் இலலாமல் அஜீத்தின் ரசிகர்கள் டென்சன் ஆகாத வகையில் அடக்க ஒடுக்கமாக கலாய்க்கிறாராம் சந்தானம்.