டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
அழகும், திறமையும் மிக்க நடிகைளில் நித்யா மேனனும் ஒருவர். தான் உண்டு தன் வேலையுண்டு இருப்பவர். எந்த கிசுகிசுக்களிலும் சிக்கிக் கொள்ளாதவர். மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் 2011ம் ஆண்டு, 180 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
அதன் பிறகு வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவுக்கு வந்த 5 வருடங்களில் அவர் நடித்தது 3 படங்களில் மட்டும்தான். மலையாளம், கன்னடத்தில் பிடித்த இடத்தை தமிழில் பிடிக்க முடியவில்லை.
தற்போது நித்யா மேனன், தமிழில் வேகமாக முன் வரிசைக்கு வந்து கொண்டிருக்கிறார். ஜே.கே என்னும் நண்பனின் வாழ்க்கை படத்தில் நித்யாவின் நடிப்பை எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். ராகவா லாரன்சின் கங்கா (முனி 3), மணிரத்தினத்தின் ஓகே கண்மணி, படங்கள் வர இருக்கிறது. ரோகினி இயக்கி உள்ள அப்பாவின் மீசை படத்திலும் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார் என்றாலும் ஓகே கண்மணி தனக்கு தமிழில் நல்ல இடத்தை தரும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார் நித்யா மேனன்.