பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இசை அமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களின் அனைத்து உரிமங்களையும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வழங்கினார். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் ஒரு பகுதியை சம்பந்தபட்ட தயாரிப்பாளருக்கு வழங்கி விட்டு மற்றொரு பகுதியை தயாரிப்பாளர் தனக்கு தரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.
தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் வளர்ச்சி நிதிக்காக இளையராஜா 10 ஊர்களில் இசை நிகழ்ச்சி நடத்தி தர முன்வந்திருக்கிறார். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நெல்லை உள்ளிட்ட நகரங்களிலும் சில வெளிநாட்டு நகரங்களிலும் இந்த நிகழ்ச்சி நடக்கலாம் என்று தெரிகிறது.
சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் இந்த தகவல் வெளியிடப்பட்டு. இளையராஜாவுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த இசை நிகழ்ச்சியை நடத்த தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களை கொண்ட வளர்ச்சி நிதி குழு ஒன்று அமைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.