ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ராம்சரணுக்கு மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்தை உருவாக்கி கொடுத்த படம் தான் 'மகதீரா'. இந்தப்படத்தின் வசனங்களை ஆந்திர மாநில கிராமம் ஒன்றில், நான்கு வயது சிறுவன் ஒருவன் மூச்சு விடாமல் மனப்பாடமாக, உணர்ச்சி பாவங்களோடு பேசுவானாம். அந்த சிறுவன் பேசுவதை அங்குள்ள சிலர் வீடியோவாக்கி தங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்ய, அந்த வீடியோ எப்படியோ ராம்சரண் பார்வைக்கும் வந்திருக்கிறது. சிறுவன் வசனங்களை மனப்பாடமாக பேசுவது கண்டு வியந்துபோன ராம்சரணுக்கு, அவனை எப்படியாவது பார்க்கவேண்டும் என்கிற ஆசையும் எழுந்தது.
உடனே தனது பேஸ்புக் பக்கத்தில் அந்த வீடியோவை ஷேர் செய்து, “இந்த வீடியோவை தினமும் தவறாது பார்த்து வருகிறேன். இந்தப்பையன் என்னை ரொம்பவே வசீகரித்து விட்டான்.. இந்தப்பையனை கண்டுபிடித்து தந்து எனக்கு உதவிசெய்வீர்களா?” என ரசிகர்களிடம் கேட்டிருந்தார். ராம்சரணே கேட்கும்போது சும்மா இருப்பார்களா அவரது ரசிகர்கள்..? இரண்டே நாட்களில் சல்லடை போட்டு சலித்து, ஆந்திராவின் மெகபூப் நகர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இருந்த பரசுராம் என்கிற அந்த சிறுவனை ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டார்களாம்.
ரொம்பவே ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த அந்தப்பையன் இந்த வயதிலேயே ராம்சரணின் தீவிர ரசிகனாம். வறுமை காரணமாக பள்ளியில் கூட அந்த பையனை அவனது பெற்றோர்கள் இன்னும் சேர்க்கவில்லையாம். இந்த விஷயங்கள் அனைத்தும் ராம்சரணின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றன. வரும் மார்ச்-14ஆம் தேதி அந்த பையனை சந்திக்க இருக்கிறார் ராம்சரண். இந்த சந்திப்பு அந்த சிறுவனின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என நம்புவோம்.