ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி |
திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளைப் பற்றி எப்போதுமே ஒரு தவறான கருத்து பரப்பப்படும். அதாவது, இயக்குனர்களிடமும், ஹீரோக்களிடமும் அவர்களது படங்களில் நடிக்க வாய்ப்புக் கேட்பார்கள் என்ற ஒரு பேச்சு எப்போதும் இருக்கும். இதில் உண்மையும் இருக்கிறது, பொய்யும் இருக்கிறது. பெரிய ஹீரோயினாக வளரும் வரை வாய்ப்புகளைக் கேட்பவர்கள், அதன் பின் அவர்களைத் தேடி வரும் வாய்ப்புகளைக் கூட யோசித்துத்தான் ஏற்றுக் கொள்வார்கள். இது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். தமிழில் சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் யாருமே வாய்ப்புகளைக் கேட்பதில்லை. ஆனால், அதையே ஏதாவது ஒரு பேட்டி என்றால் விஜய்யுடன் நடிக்க ஆசை, அஜித்துடன் நடிக்க ஆசை என மறைமுகமாகக் கேட்டு விடுவார்கள்.
தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருக்கும் காஜல் அகர்வால், தற்போது தமிழில் தனுஷுடன் 'மாரி' படத்திலும், விஷாலுடன் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார். ஆனாலும், அஜித், விக்ரம் போன்ற மற்ற ஹீரோக்களுடன் காஜல் இதுவரை நடிக்கவில்லை. இருந்தாலும் அஜித், விக்ரம் படங்களில் காஜலை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தகவல். அதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் அவர் இதுவரை தனக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டதில்லையாம். “என்னைத் தேடி வரும் வாய்ப்புகளில் கதையும் என்னுடைய கதாபாத்திரமும் பிடித்திருந்தால் மட்டுமே நடிக்கிறேன். யாரிடமும் நான் இதுவரை நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டதில்லை, எதிர்காலத்திலும் அப்படி கேட்கவும் மாட்டேன்,” என்று சொல்லியிருக்கிறார் காஜல் அகர்வால்.