சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
இரண்டு காலகட்டத்தில் நடக்கும் கதை அம்சம் கொண்ட ஃபேன்டஸி படம்தான் - புலி. ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, நான் ஈ சுதீப் ஆகியோர் நடிக்கின்றனர்.
விஜய்யை வைத்து புலி படத்தை இயக்கி வரும் சிம்புதேவன் ஏன்டா இந்தக்கதையை கையில் எடுத்தோம் என்று நொந்துபோகிறாராம். அந்தளவுக்கு கடுமையாக வேலை வாங்குகிறதாம் லொகேஷன் தேடும் பணி. சென்னை உத்தண்டியில் தொடங்கிய புலி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. அங்கே பாடல், காமெடி, மற்ற காட்சிகள் என படமாக்கப்பட்டன. தற்போது புலி படத்தில் இடம்பெறும் அதிரடி சண்டைக்காட்சிகளை படமாக்கத் துவங்கியுள்ளார் சிம்புதேவன். இந்தக்காட்சிகளை படமாக்க பல ஊர்களுக்கு லொகேஷன் தேடி அலைந்திருக்கிறார். கடைசியாக, கேரளாவில் உள்ள வாகாமன் நீர்வீழ்ச்சி, அதிரபல்லி மற்றும் மஹோகனி காடு ஆகிய இடங்களை தேர்வு செய்தார். கடந்த சில நாட்களாக கேரளாவில் முகாமிட்டிருக்கும் புலி படக்குழுவினர், அங்கே வாகாமன் நீர்வீழ்ச்சியில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். அங்கிருந்து ஷிப்ட்டாகி, தற்போது மஹோகனி எனும் இடத்திலுள்ள அடர்ந்த காடுகளில் அதிரடி சண்டைக்காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள்.