ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மராட்டிய மாநில அரசு சமீபத்தில் அம்மாநிலம் முழுவதும் பசு மாடுகளை கொல்லவும், மாட்டிறைச்சி விற்பதையும் தடை செய்து சட்டம் இயற்றியுள்ளது. இந்த முடிவுக்கு ஆதரவாக சிலரும், எதிர்ப்பாக பலரும் குரல் எழுப்பி வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் பசுக்கள் கொல்லப்படுவதையும், மாட்டிறைச்சி விற்பனை செய்வதையும் மாநில அரசு தடை செய்ய வேண்டும் என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதேபோல மாட்டிறைச்சியை அதிகம் பயன்படுத்தும் கேரளாவில் இப்படி ஒரு தடை கொண்டுவரப்பட்டால் அதை வரவேற்பேன் என மலையாள ஆக்சன் கிங் சுரேஷ்கோபி தெரிவித்துள்ளார். இதுபற்றி சுரேஷ்கோபி கூறுகையில், “அதுமட்டுமல்ல எங்கள் வீட்டில் யாரும் மாட்டிறைச்சி உண்பதும் இல்லை.. அதை வீட்டிற்குள் அனுமதிப்பதும் இல்லை. இப்படி ஒரு சட்டம் கேரள அரசால் கொண்டுவரப்பட்டால் ஒரு சாதாரண குடிமகன் என்கிற நிலையில் அதனை வரவேற்பேன்” என கூறியுள்ளார்.