பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'கடல்' படத்திற்குப் பிறகு மணிரத்னம் இயக்கி வரும் படம் 'ஓ காதல் கண்மணி'. இந்தப் படம் தெலுங்கில் 'ஓகே பங்காரம்' என்ற பெயரில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான், நித்யா மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் தமிழில் துல்கர் சல்மானே டப்பிங் பேசி விடுவார். அவர் சென்னையில் படித்து வளர்ந்துவர் என்பதால் தமிழ் நன்றாகப் பேசுவார். ஆனால், அவருக்குத் தெலுங்கு தெரியாது என்ற காரணத்தால் தெலுங்கில் அவருக்குப் பதிலாக நடிகர் நானி டப்பிங் பேச உள்ளார். அவ்வளவாக பிரபலமாகாத ஹீரோவாக துல்கர் இருந்தாலும், மணிரத்னம் படம் என்பதால் முன்னணி நடிகர் ஒருவரை வைத்துத்தான் டப்பிங் பேச வைக்க வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார்களாம்.
நானியின் குரல் மிகவும் வித்தியாசமாகவும், அருமையாகவும் இருக்கும் என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளார்களாம். இதற்கான வேலைகளும் ஆரம்பமாகிவிட்டது என்கிறார்கள். தமிழில் தமிழ்ப் புத்தாண்டு அன்று இந்தப் படம் வெளியாக உள்ளது. தெலுங்கிலும் அதே தினத்தில் வெளியிடுவார்களா அல்லது ஒரு வாரம் தள்ளி விடுவார்களா என்பது பின்னர்தான் தெரிய வரும். தெலுங்குத் திரையுலகில் சமீப காலமாக தமிழிலிருந்து தெலுங்கிற்கு வெளியாகும் டப்பிங் படங்களை தமிழில் வெளியான பிறகு ஒரு வாரம் கழித்தோ அல்லது இரண்டு வாரம் கழித்தோதான் வெளியிடுகிறார்கள். ஆனால், மணிரத்னம் படத்திற்கு அப்படி இருக்குமா என்பது தெரியவில்லை. தெலுங்கின் மிகப் பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான தில் ராஜு இந்தப் படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை வாங்கியிருக்கிறார். எனவே, தமிழிலும், தெலுங்கிலும் ஒரே நாளில் வெளியாக வாய்ப்புள்ளது.