இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சமுத்திரக்கனி இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், ஜெயம் ரவி, அமலா பால் மற்றும் பலர் நடிக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த திரைப்படம் 'நிமிர்ந்து நில்'. சில பல தடைகளைக் கடந்துதான் இந்தப் படம் தமிழில் வெளியானது. மார்ச் 7ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு ஒரு நாள் தாமதமாக 8ம் தேதிதான் வெளியானது. எந்த ஒரு படமாக இருந்தாலும் அது குறிப்பிட்ட தேதியில் வெளியாகாமல் ஒரு நாள் தாமதமாக வெளியானால் கூட, அது ரசிகர்களின் வரவேற்பை அதிகம் பெறாது என்ற சென்டிமென்ட் தமிழ் சினிமாவில் உண்டு. அது இந்தப் படத்திற்கும் நடந்தது.
தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பு அப்போதே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி அந்தப் படம் அப்போது வெளியாகவில்லை. தொடர்ந்து சில தேதிகள் அறிவிக்கப்பட்டு அதன் பின்னரும் அந்தப் படம் வெளியாகாமலே போனது. தற்போது மார்ச் மாதம் 27ம் தேதியன்று யுகாதி தினத்தன்று இந்தப் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். நானி, அமலா பால் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். நானி நடித்து இதற்கு முன் வெளிவந்த சில தெலுங்குப் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இந்தப் படம் வெளியாகும் போதும் நானியின் மற்றொரு தெலுங்குப் படமான 'எவனே சுப்பிரமணியம்' படமும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.