இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
கே.பாலசந்தர் இயக்கிய டூயட், கல்கி படங்களில் நடித்து தமிழில் வளர்ந்து வந்தபோது, நடிகை லலிதாகுமாரியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ். அதையடுத்து அவர்களுக்கு மூன்று மகள்களும் பிறந்தனர். ஆனால் இருவரும் 1994 முதல் 2009 வரை கணவன்-மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். அதன்பிறகு பிரகாஷ்ராஜ், போனி வர்மா என்ற மும்பை நடன மாஸ்டரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். அதோடு மும்பையிலேயே செட்டிலாகி விட்டார். இந்த நிலையில் சென்னையில் தனது மகள்களோடு வாழ்ந்து வரும் லலிதாகுமாரி, மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படட நிலையில், தற்போது சார்லஸ் ஷபி கார்த்திகா என்ற படத்தில் காஸ்டியூம் டிசைனராக ஒர்க் பண்ணியிருக்கிறார். இப்படத்தின் ஆடியோ ரிலீசின்போது, மேடையில் தோன்றிய லலிதாகுமாரி, இந்த படத்தை இயக்கியுள்ள சத்யமூர்த்தி எனது தம்பி போன்றவர். எனது மகளுக்கு அவர் டியூசன் மாஸ்டராக இருந்தபோது, பிரகாஷிடம் உதவி இயக்குனராக வேண்டும் என்ற ஆசைப்பட்டார். அதையடுத்து நான் பிரகாஷிடம் அதுபற்றி சொன்னேன். உடனே சத்யமூர்த்தியை தனது படத்தில் உதவி இயக்குனராக்கிக்கொண்டார் என்று தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார் லலிதாகுமாரி.