பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஏ.ஐ.பி,.ரோஸ்ட் நிகழ்ச்சி தொடர்பாக, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவை, வரும் 16ம் தேதி வரை கைது செய்வதிலிருந்து இடைக்காலத்தடை விதித்து, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏ.ஐ.பி.ரோஸ்ட் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில், அனைவரின் முன்பு, தீபிகாவை கட்டியணைத்து, ரன்வீர் சிங் முத்தமி்ட்டார். இதற்கு, தீபிகா படுகோனேவும், எவ்வித மறுப்பும் தெரிவிக்காமல், ரன்வீர் சிங்கிற்கு ஒத்துழைப்பு தந்தார். பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்திருந்த, சோனாக்ஷி சின்கா உள்ளிட்ட பலர் இதற்கு ஆதரவு தெரிவித்து கரகோஷம் எழுப்பியபடி இருந்தனர்.
ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட பொதுநிகழ்ச்சியில், இவ்வாறு அவர்கள் நடந்துகொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என்று கூறி, முன்னணி வக்கீல் ஒருவர், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, ரன்வீர்சிங், தீபிகா படுகோனே, அர்ஜூன் கபூர், சோனாக்ஷி சின்கா உள்ளிட்டோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டது.