‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
யான் படத்தின் படு தோல்வியானால் நடிகர் ஜீவாவுக்கு வேறு எந்த படமும் கமிட் ஆகவில்லை. அந்தப் படத்தை தயாரித்த வகையில் 15 கோடிக்கு மேல் நஷ்டப்பட்ட ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஜீவாவும் ஒரு காரணம் என குற்றம்சாட்டியது. இந்நிலையில் பொதுவான நண்பர் எடுத்த சமரச முயற்சி காரணமாக ஜீவாவும், ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரும் சந்தித்து பேசினர்.
இரண்டு தரப்பினரும் தங்களின் மன வருத்தங்களை பகிர்ந்து கொண்டனர். பின்னார், யான் நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்துக்கு சம்பளம் வாங்காமல் ஒரு படத்தில் நடித்துத் தருவதாக வாக்குறுதி கொடுத்தார் ஜீவா. அதன்படி புதிய படத்தைத் தொடங்கிவிட்டனர்.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் டீகே இயக்கி கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து வெற்றிபெற்ற படம் யாமிருக்க பயமே. டீகே இயக்கத்தில் நாயகனாக நடிக்கிறார் ஜீவா. கவலை வேண்டாம் என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தின் இதர நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர ராம்நாத் இயக்கத்திலும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் ஜீவா. அவரது புரடக்ஷன் மானேஜர் பெயரில் ஆர்.பி. சௌத்ரி தயாரிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். ஆக.. சும்மா இருந்த ஜீவா தற்போது இரண்டு படங்களில் நடிக்கிறார்.