தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் அருண்பாண்டியன் தயாரிக்கும் படம் சவாலே சமாளி. கழுகு, சிவப்பு படங்களை இயக்கிய சத்யசிவா இயக்குகிறார். அசோக் ஷெல்வன், பிந்து மாதவி, கருணாஸ், ஊர்வசி நடிக்கிறார்கள். செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். தமன் இசை அமைக்கிறார்.
படத்தை பற்றி சத்ய சிவா இப்படிக் கூறுகிறார், "கழுகு படத்தில் கொடைக்கானல் மலையில் தற்கொலை செய்து கொண்டவர்களின் பிணங்களை மீட்கும் ஒரு சமூக மக்களின் வாழ்க்கையை சொன்னேன். சிகப்பு படத்தில் இலங்கை தமிழ் அகதிகள் தமிழ் நாட்டில் அனுபவிக்கும் சோகத்தை சொன்னேன். மூன்றாவது படத்தை ரொம்ப ஜாலியாக இயக்க வேண்டும் என்று அந்த கதையை அருண் பாண்டியன் சாரிடம் சொன்னதும் தயாரிக்க முன் வந்தார். இது ஏ டூ இசட் காமெடி படம். சீரியசான எந்த விஷயமும் கிடையாது.
அசோக் ஷெல்வனும், நண்டு ஜெகனும் ஒரு டி.வி.சேனலில் வேலை செய்கிறார்கள். அது ஒரு உப்புமா சேனல். மொக்கை நிகழ்ச்சியாக ஒளிபரப்பி டிஆர்பி ரேட்டிங்கில் கடைசியில் இருக்கும். இதனால் நஷ்டமடையும் சேனல் முதலாளி கருணாஸ் தற்கொலை முயற்சி வரைக்கும் போவார். அப்போது அசோக் ஷெல்வனும், ஜெகனும் சேர்ந்து புதுப்புது யோசனைகளுடன் புது புது நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். அது அதிரிபுதிரி ஹிட் அடிக்க சேனல் முதல் இடத்துக்கு வந்துவிடும். ஆனால் புது நிகழ்ச்சிகளுக்கு செய்த சில வேலைகளால் அசோக்கும், ஜெகனும் இடியாப்ப சிக்கலுக்குள் மாட்டிக் கொள்வார்கள். அது என்ன சிக்கல், அதிலிருந்து எப்படி மீண்டார்கள் என்பதுதான் கதை'' என்றார்.