ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கலாபக் காதலன், உளியின் ஓசை, உயர்திரு 420 படங்களில் நடித்த அக்ஷயா, இப்போது யாளி என்ற படத்தை தயாரிக்கிறார். இதில் அக்ஷயா ஹீரோயினாக நடிக்கிறார். அர்ஜுன் என்ற புதுமுகம் ஹீரோவாக நடிக்கிறார். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யன் இசை அமைக்கிறார். பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.
கந்தாஸ் இயக்குகிறார். படத்தை பற்றி அவர் கூறியதாவது: இது யானை, குதிரை, சிங்கம் குணம் கொண்ட மனிதர்களின் மோதல் கதை. யானை ஹீரோ, சிங்கம் வில்லன், குதிரை ஹீரோயின். முழு கதையும் மலேசியாவில் உள்ள பிஜி தீவில் நடக்கிறது. அந்த தீவில் 80 ஆயிரம் தமிழ் குடும்பங்கள் வசிக்கிறது. இந்த படத்தின் வாயிலாக அவர்களின் வாழ்க்கை காட்டப்படுகிறது. முக்கிய கேரக்டர்கள் தவிர அங்குள்ள மக்களும் இதில் நடிக்கிறார்கள். ஒரே மாதத்தில் ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து திரும்ப திட்டமிட்டிருக்கிறோம். என்றார் கந்தாஸ்.