நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
மெட்ராஸ் படத்தை அடுத்து கார்த்தி நடிப்பில் வெளியாகும் படம் கொம்பன். இந்த படத்தை சசிகுமார் நடித்த குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இயக்கியிருக்கிறார். லட்சுமிமேனன் நாயகியாக நடித்துள்ளார். மேலும், 1962ல் வெளியான கற்பகம் படத்தையடுத்து இந்த படம்தான் தமிழில் மாமனார் மருமகனை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியிருக்கிறது. அந்த வகையில், மாமனார்-மருமகனுக்கிடையே நடக்கும் ஈகோ மற்றும் பாசப்போராட்டம்தான் இந்த படமாம். அதோடு, ரஜினிக்கு எஜமான், கமலுக்கு தேவர் மகன், விஜயகாந்துக்கு சின்ன கவுண்டர் படங்கள் அமைந்தது போல் இந்த கொம்பன் படம் கார்த்திக்கு அமையும் என்கிறார்கள்.
இப்படம் குறித்து கார்த்தி பேசும்போது, மெட்ராஸ் படத்துக்கு பிறகு எனது நடிப்பில் வெளியாகும் படம் இது. பருத்தி வீரன் படத்தில் நடித்த பிறகு கிராமத்து கதைகளாக என்னைத் தேடி வந்தன. ஆனால், நான் அப்போது கிராமத்து கதைகளை தவிர்த்து நகரத்து கதைகளாக நடித்து கிராமத்து முத்திரை விழாமல் பார்த்துக்கொண்டேன். ஆனால் இப்போது கொம்பன் கதையை கேட்டபோதுகூட மறுபடியும மதுரை கதையா? என்று பயந்தேன். ஆனால், இது மதுரை கதையல்ல ராமநாதபுரம் சார்ந்த மண்வாசனைக்கதை என்றார்கள். அதோடு, பருத்தி வீரனில் இருந்து மாறுபட்ட கதை. பருத்தி வீரனில் நானும், ப்ரியாமணியும் காதலிப்பது போன்று நடித்தோம். ஆனால் இந்த படத்தில் லட்சுமிமேனன் எனது மனைவியான பிறகு நடக்கிற விசயங்கள்தான் கதை.
குறிப்பாக, இந்த படத்தில் எனக்கு மாமனாராக நடித்துள்ள ராஜ்கிரணுக்கும் எனக்குமிடையே நடக்கிற பிரச்சினைகள்தான் இந்த படம். முக்கியமாக, இந்த படத்தில் சினிமாத்தனம் இல்லாமல் யதார்த்தமான காட்சிகளே அதிகமாக இருக்கும். கதாநாயகி விறகு அடுப்பில் சமைக்கும் காட்சிகள்கூட உள்ளது. அதேபோன்று அந்த ஏரியா முகங்களும் நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். அதனால் கொம்பன் புது கலரில் இருக்கும். அதிலும் ராஜ்கிரண் சார் அருமையாக நடித்திருக்கிறார். அவரது நடிப்பைப்பார்த்து அவருடன் போட்டி போட்டு நடிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. நான் படம் முழுக்க மாமனாரை மதிக்காத மருமகனாகவும், அவர் திருமணமான தனது மகள் சந்தோசமாக இருக்கிறாளா? இல்லையா? என்ற பதட்டத்துடன் இருக்கும் ஒரு பொறுப்பான தந்தையாகவும் நடித்துள்ளார்.
மொத்தத்தில், இந்த கொம்பன் படம் உணர்வுரீதியான ஒரு பாசப்போராட்ட கதையில் உருவாகியிருக்கிறது. மேலும், பருத்தி வீரன் சாயல் இந்த படத்தில் எந்த இடத்திலும வந்து விடக்கூடாது என்று நான் நடித்த ஒவ்வொரு காட்சிகளையும் உதவி இயக்குனர்களை பார்க்க வைத்து அதன்பிறகே நடித்தேன். அதனால் இந்த படத்தில் உதவி இயக்குனர்களை நான் ரொம்பவே கஷ்டப்படுத்தியிருக்கிறேன். அதோடு, பருத்திவீரனில் நெகட்டிவ் ரோலில் நடித்த நான் இந்த படத்தில் பாசிட்டிவான ஹீரோவாக நடித்திருக்கிறேன் இவ்வாறு கார்த்தி பேசினார்.