'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
23 வயதே ஆகும் ஹன்சிகா, 30 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதோடு முதியவர்களுக்கும் ஆதரவளித்து மருத்துவ செலவுகளை செய்து வருகிறார். அதற்காக தனது வருமானத்தில் ஒரு பகுதியை சமூக சேவையில் செலவிட்டு வருகிறார். அந்த அளவுக்கு இளகிய மனம் கொண்ட ஹன்சிகாவின் குளியல் வீடியோ சமீபத்தில் வாட்ஸ் அப்பில் வெளியானது அவரை பெரிய அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. அதையடுத்து அந்த வீடியோவில் இருப்பது நானல்ல. வேறு பெண் என்று சொல்லி பேட்டியும் கொடுத்தார். இருப்பினும், சமீபகாலமாக உள்ளூர் வெளியூர் என்று படப்பிடிப்புகளுக்கு செல்வதால் அந்தந்த ஊர்களில் இருக்கும் ஹோட்டல்களில் தங்கும் ஹன்சிகா, எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என்பது தெரியாது என்பதால், தான் ஹோட்டலில் தங்க செல்வதற்கு முன்பே தங்கும் அறையில் எங்காவது ரகசிய கேமராக்கள் உள்ளதா? என்பதை நன்றாக பரிசோதனை செய்த பிறகே அறைக்குள் காலடி எடுத்து வைக்கிறாராம். அதோடு, பெரும்பாலும் கேரவன்களே பயன்படுத்தப்படுவதால், அதற்குள்ளும் சிறிய அளவிலான கேமராக்கள் உள்ளதா? என்பதை முன்கூட்டியே சோதித்துக்கொள்கிறாராம். இந்த பாதுகாப்புக்கென்று தற்போது சில நபர்களை அவர் பிரத்யேகமாக நியமித்திருக்கிறாராம்.