தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒவ்வொரு நடிகருக்குமே அவர்கள் நடித்து வெளிவந்த ஏதாவது ஒரு படம் நம் மனதில் அப்படியே ஆழமாகப் பதிந்து விடும். ரஜினிகாந்த் என்றால் 'பாட்ஷா', கமல்ஹாசன், என்றால் 'மூன்றாம் பிறை', விஜய் என்றால் 'குஷி', அஜித் என்றால் 'வாலி', சூர்யா என்றால் 'காக்க காக்க', விக்ரம் என்றால் 'சேது' என அவரவர் நடித்த படங்களில் ஏதாவது ஒரு படம் பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடும். அப்படி கார்த்தி நடித்து வெளிவந்த முதல் படமான 'பருத்தி வீரன்' படம் வெளிவந்து இத்தனை ஆண்டுகளாகியும் அந்தப் படத்தை இன்னும் பலரும் மறக்கவில்லை.
கிடா மீசை, கருப்பு சட்டை, லுங்கி, திமிரான நடை, ஏளனமான பேச்சு என அந்தப் படத்தில் அப்படியே அச்சு அசலாக அந்த கிராமத்து இளைஞனை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார் கார்த்தி. அந்தப் படத்திற்குப் பின் மூன்று வருடங்கள் கழித்துத்தான் அவர் தன்னுடைய இரண்டாவது படத்தில் நடித்தார். அவருக்குத் தொடர்ந்து கிராமத்துக் கதாபாத்திரங்களே வந்ததால்தான் இரண்டாவது படத்திற்கு அவ்வளவு இடைவெளி விட்டார். 'பையா' படத்தில்தான் கார்த்தி 'பேண்ட், சட்டை' அணிந்து சராசரி இளைஞனாக நடித்திருந்தார்.
சுமார் எட்டு ஆண்டுகள் கழித்து தற்போதுதான் 'கொம்பன்' படத்தின் மூலம் மீண்டும் ஒரு கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்திலும் 'கிடா மீசை, வேட்டி, அதே ஏளனம்' என நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் நாட்களில் உதவி இயக்குனர்களை கார்த்தி நிறையவே கஷ்டப்படுத்தினாராம். அதையும் சொன்னது கார்த்திதான். “இந்தப் படத்துல மீண்டும் கிராமத்துக் கதாபாத்திரம்னு சொன்ன உடனே கொஞ்சம் யோசிச்சேன். இருந்தாலும் அருமையான கதை. படத்தோட படப்பிடிப்பு ஆரம்பிச்சதுமே ஒவ்வொரு நாளும் உதவி இயக்குனர்களை நிறையவே தொந்தரவு பண்ணினேன். ஒவ்வொரு காட்சி நடிச்ச பிறகும், உதவி இயக்குனர்கள் கிட்ட, ஏம்பா, 'பருத்தி வீரன்' மாதிரி எங்கயாவது நடிச்சிருந்தன்னானு அவங்ககிட்ட கேட்டு தொந்தரவு பண்ணுவேன். அவங்க அப்படி எதுவும் தெரியலைன்னு சொன்ன பிறகுதான் அமைதியாவேன். அந்த அளவுக்கு ஒரு பயம் இருந்துச்சி,” என்கிறார் கார்த்தி.
'கொம்பன்' பாடல்களைப் பார்த்த பிறகு அது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் 'பருத்தி வீரன்' போன்ற வெற்றி கார்த்திக்கு மீண்டும் கிடைத்துவிடும் போலத்தான் தெரிகிறது.