விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
துல்கர் சல்மான் மலையாளத்தில் நடித்த முதல் படமான 'செகண்ட் ஷோ'வில் 'குருடி' என்கிற கதாபாத்திரத்தில் சுப்ரமணியபுரம் சசிகுமார் ரேஞ்சுக்கு நடிப்பால் அசத்தியவர் தான் சன்னி வெய்ன். இது தவிர 'நீலாகாசம் பச்சக்கடல் சுவண்ண பூமி' என இந்த இரண்டு படங்களிலுமே துல்கரின் நண்பனாய் துணைக்கு வந்த நடிகர் சன்னி வெய்னை அவ்வளவு சுலபத்தில் மறந்துவிட முடியாது.. இரண்டாவது கதாநாயகனாகவும் ஹீரோவின் நண்பனாகவும், சீரியஸ் காமெடி, குணச்சித்திரம் என வெரைட்டியாக நடித்து வந்த சன்னி வெய்ன் சமீபத்தில் வெளியான 'சாரதி' படம் மூலம் ஹீரோ அந்தஸ்து பெற்றார்.
அதை தொடர்ந்து தற்போது பிரவீண் பிரபாகரன் என்பவர் இயக்கவுள்ள புதிய படத்திலும் சன்னி தான் ஹீரோ.. ஆனால் படத்தின் பெயரோ 'வில்லன்'. 'செகன்ட் ஷோ' படத்தில் சன்னியுடன் துணை இயக்குனராக வேலை பார்த்தபோது ஏற்பட்ட நடிப்பின் அடிப்படையில் அவரை தனது படத்திற்கு ஹீரோ ஆக்கியுள்ளார் இயக்குனர் பிரவீண். இதில் முதன்முறையாக போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார் சன்னி வெய்ன். ஒரு போலீஸ் அதிகாரியின் உண்மை வாழ்க்கையைத்தான் 'வில்லன்' பிரதிபலிக்குமாம்.