ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'ஐ' படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராக இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கிய எமி ஜாக்சன் அதில் வெற்றியும் பெற்று விட்டார். உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு படம், தனுஷ் ஜோடியாக மற்றொரு படம் என பிஸியாக ஆகிவிட்டார். உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்கும் புதிய படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன் கேரளாவில் கொச்சியில் ஆரம்பமானது. உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன், கருணா மற்றும் பலர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இரண்டு நாட்களுக்கு முன்னர் முடிந்துவிட்டது.
அது குறித்து எமி ஜாக்சன், “உதயநிதி ஸ்டாலினுடன் என்னுடைய முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கேரளாவில் படப்பிடிப்பு அற்புதமாக நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின், கருணா இருவரையும் மிஸ் செய்கிறேன். என்னை விட்டு விட்டு நீங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்காதீர்கள். மலை மீது பைக் ரைட் போகாமல் தடுத்த கருணாவிற்கு நன்றி,” என்று கூறியுள்ளார்.
முதல் கட்டப் படப்பிடிப்பிலேயே உதயநிதி ஸ்டாலினும், கருணாவும் எமி ஜாக்சன் மனதில் இடம் பிடித்து விட்டார்கள். இரண்டு வாரங்களுக்குள்ளேயே இந்தக் கூட்டணி கலகலப்பாக படப்பிடிப்பை நடத்தியிருக்கிறது என்பது மட்டும் இதிலிருந்து தெரிகிறது. 'மான் கராத்தே' திருக்குமரன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார்.