நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
பீட்சா, ஜிகிர்தண்டா படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனது நண்பர்களுடன் இணைந்து ஸ்டோன் பென்ஞ் என்ற நிறுவனத்தை துவக்கி இருக்கிறார். இது குறும்படங்களுக்கான ஒரு களம். குறும்படத்தை இயக்கியவர்கள் அதனை இந்த நிறுவனத்திடம் ஒப்படைத்தால் அதனை விருது விழாக்களுக்கு அனுப்பி வைப்பது, வியாபாரம் செய்வது, திரையிடுவது போன்ற பணிகளை இது கவனித்துக் கொள்ளும். அந்த அடிப்படையில் தற்போது 6 குறும்படங்களை இணைத்து இரண்டரை மணி நேர முழு படமாக தியேட்டரில் திரையிடும் திட்டத்தை துவக்கி உள்ளார். இதன் துவக்க விழா நேற்று (மார்ச் 4) நடந்தது.
பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியதாவது: சினிமாவைப்போல குறும்படமும் ஒரு கலை. ஆனால் அதற்கு மக்களிடம் பெரிய அங்கீகாரம் இல்லை. விருது விழாக்களில் கலந்து கொள்வது, விருது பெறுவது, நண்பர்களுக்கு திரையிடுவது என்கிற குறுகிய வட்டத்துக்குள் குறும்படங்களின் ஆயுள் முடிந்து விடுகிறது. அதை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியே இந்த அமைப்பு.
ஒரு குறும்படம் 20 முதல் 40 நிமிடங்கள் வரை இருக்கும். இதை பார்க்க மட்டும் யாரும் தியேட்டருக்கு வரமாட்டார்கள். அவர்களுக்கு இரண்டரை மணி நேர படம் வேண்டும். அதனால் 6 படங்களை ஒன்றாக சேர்த்து ஒரே படமாக தியேட்டருக்கு கொண்டு வந்திருக்கிறோம்.
சினிமாவை டிக்கெட் எடுத்து பார்ப்பதைபோல மக்கள் இனி குறும்படங்களையும் டிக்கெட் எடுத்து பார்ப்பார்கள். சென்னை, கோவை, பெங்ளூரில் உள்ள தியேட்டர்களில் மார்ச் 6 முதல் இதனை செயல்படுத்துகிறோம். அதன் பிறகு மற்ற நகரங்களுக்கு விரிவு படுத்துகிறோம்.
இனி வரும் காலத்தில் பெரிய இயக்குனர்களும் குறும்படம் இயக்குவார்கள், பெரிய நடிகர்களும் நடிப்பார்கள் அப்போது இதன் வீச்சு அதிகமாக இருக்கும். வியாபாரமும் பெருகும், நிறைய பேருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். குறும்படத்துக்கென்று தனி மார்க்கெட்டையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்வரை ஓய மாட்டேன் என்றார்.