டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகை சரிதாவும், மலையாள நடிகர் முகேசும் 1988ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பல ஆண்டுகளுக்கு முன்பே இருவரும் கருத்து வேறுபாடால் பிரிந்து விட்டனர். பின்னர் விவாகரத்து வழக்கு தொடரப்பட்டு கோர்ட் விவாகரத்தும் வழங்கி விட்டது. முகேஷ் வேறு திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் விவாகரத்து செல்லாது என்று தற்போது சரிதா வழக்கு தொடர்ந்துள்ளார். "விவாகரத்து வழக்கு நடந்தபோது நான் துபாயில் இருந்தேன். கோர்ட் அனுப்பிய நோட்டீஸ்கள் எனக்கு கிடைக்கவில்லை. இதனால் நான் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதையே காரணமாக கூறி விவாகரத்து வழங்கப்பட்டுவிட்டது. எனது கருத்தை கேட்காமல் கொடுக்கப்பட்ட விவாகரத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று அவர் தனது வழக்கில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கின் மீது விசாரணை நடத்த சரிதா, முகேஷ் இருவருக்கும் கோர்ட் சம்மன் அனுப்பியது. இருவரும் நேற்று (மார்ச் 4) கொச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். விசாரணைக்கு பின் வெளியே வந்த சரிதா கோர்ட் வளாகத்திற்குள் திடீரென மயங்கி விழுந்தார். உடனே கோர்ட் ஊழியர்களும், பொதுமக்களும் அவருக்கு தண்ணீர் கொடுத்து மயக்கம் தெளிவித்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். சரிதா மயங்கி விழுந்த செய்தி கேட்டும் எந்த ரீயாக்ஷனும் இல்லாமல் தன் காரில் ஏறி சென்று விட்டார் முகேஷ்.