அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ்த் திரையுலகில் சாவித்திரி, ரேவதிக்குப் பிறகு இன்றைய நடிகர்களில் அந்த வரிசையில் இடம் பிடிக்கக் கூடியவர்களில் தகுதியான ஒருவர் என பேசப்பட்டவர் அஞ்சலி. அறிமுகமான முதல் படத்திலிருந்து அவர் தமிழில் கடைசியாக நடித்து வெளிவந்த படம் வரை பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருந்தார். குடும்பப் பிரச்சனை காரணமாக சென்னையை விட்டுச் சென்று ஐதராபாத்தில் தஞ்சமடைந்தார். அங்கும் எங்கிருக்கிறார் என்று தெரியாமல் மறைவு வாழ்க்கை வாழத் தொடங்கினார். சில மாதங்கள் தொடர்ச்சியாக செய்திகளில் அடிபட்டு வந்தார். தற்போது அனைத்திலிருந்தும் விடுபட்டு மீண்டும் தமிழில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.
தற்போது தமிழில், ஜெயம் ரவி, த்ரிஷா நடிக்கும் 'அப்பா டக்கர்' படத்திலும், விமல் ஜோடியாக 'மாப்ள சிங்கம்' படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகின்றன. இந்தப் படங்களுடன் தொடர்ந்து தமிழில் தன்னைத் தேடி வரும் வாய்ப்புகளையும் பரிசீலிக்க ஆரம்பித்து விட்டாராம். 'சேட்டை' படத்திற்குப் பிறகு அஞ்சலி நடித்து வேறு எந்த தமிழ்ப் படமும் வெளிவராத இரண்டு ஆண்டு கால இடைவெளியை சரியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாராம்.
அடுத்து 'கற்றது தமிழ்' படத்தில் தன்னை அறிமுகப்படுத்திய ராம் இயக்கத்தில், மம்முட்டி நாயகனாக நடிக்கும் படத்திலும் அஞ்சலியை நாயகியாக நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். தனக்கு நெருக்கமானவர்களைத் தொடர்பு கொண்டு அஞ்சலியே வாய்ப்பு கேட்டு வருவதாகவும் கூட கோலிவுட்டில் பேசிக் கொள்கிறார்கள்.