'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
சமீபகாலமாக டைரக்டர்கள் மட்டுமின்றி கமல், தனுஷ் உள்ளிட்ட சில ஹீரோக்களும் பாடல்கள் எழுதத் தொடங்கி விட்டனர். ஆரஞ்சு மிட்டாய் படத்தில் விஜயசேதுபதி வசனமே எழுதியிருக்கிறார். அந்த அளவுக்கு எழுத்து துறையில் நடிகர்களும் நுழைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், டைரக்டர் ஏ.வெங்கடேசுக்கும் நீண்டகாலமாக தானும் ஒரு படத்தில் பாடல் எழுத வேண்டும் என்ற ஆசை இருந்து வந்ததாம். அதனால், ரொம்ப நல்லவன்டா நீ என்ற பெயரில் தான் இயக்கியுள்ள படத்தில் ஒரு டூயட் பாடலை எழுதினாராம்.
அதாவது, ரஜினி பிடிக்கும் கமல் பிடிக்கும், அதை விட உன்னை ரொம்ப பிடிக்கும். அஜீத் பிடிக்கும், விஜய் பிடிக்கும் அதைவிட உன்னை ரொம்பப் பிடிக்கும் என்று முதல் நான்கு வரிகளை எழுதியவருக்கு மேற்கொண்டு எழுத முடியவில்லையாம். அதனால் அந்த பாடலை வேறு பாடலாசிரியரை வைத்து எழுதினாராம். ஆக, பாடல் எழுதுவதும் சாதாரணமான விசயமல்ல, அதிலும் கஷ்டம் இருக்கிறது என்பதை அப்போதுதான் புரிந்து கொண்டாராம் வெங்கடேஷ்.