டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபகாலமாக படங்களுக்கு கதை ரெடி பண்ணுவதை விட டைட்டீல் வைப்பதற்குதான் ரொம்ப கஷ்டப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக, கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்துக்கு கிட்டத்தட்ட 250 டைட்டீல்களை யோசித்த பிறகுதான் இந்த டைட்டீலை முடிவு செய்தேன் என்றார் சுசீந்திரன்.
அதுவும் ரஜினி நடித்த படத்தின் தலைப்பு அது. அதேபோல், அஜீத்தின் ஆரம்பம் படம் தொடங்கியதில் இருந்து படப்பிடிப்பு முடிந்த பிறகும்கூட அப்படத்திற்கான தலைப்பை முடிவு செய்யவில்லை விஷ்ணுவர்தன். எந்த டைட்டீலை சொன்னாலும அஜீத்துக்கு பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தவர், கடைசியில் பேச்சுவாக்கில் ஆரம்பம் என்று வைக்கலாமா? என்று கேட்க, சூப்பர், இதுதான் கதைக்கேற்ற டைட்டீல் என்று ஓகே சொன்னாராம் அஜீத். ஆக, இப்போதெல்லாம் டைட்டீல்தான் ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.
இந்தநிலையில், புலியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் ராஜா ராணி டைரக்டர் அட்லி ஏற்கனவே கதையை ரெடி பண்ணிவிட்டு விஜய்யின் வருகைக்காக பல மாதங்களாக காத்துக்கொண்டிருக்கிறார். இந்த வேளையில், அவரும் டைட்டில் ஆலோசனையில் இறங்கியிருக்கிறார். அதோடு தான் யோசிக்கும் டைட்டீல்களை அவ்வப்போது விஜய்யை சந்திக்கும்போதெல்லாம் அவரது கவனத்துக்கும் கொண்டு சென்று வருகிறாராம். ஆனபோதும, இன்னும் விஜய்யின் மனங்கவர்ந்த தலைப்பு செட்டாகவில்லையாம்.