ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நயன்தாரா தமிழில் அதிகமான படங்களில் நடித்துள்ள போதும், தாய்மொழியான மலையாளத்திலும் இதுவரை 8 படங்களில் தான் நடித்திருக்கிறார். அதில் சில படங்கள் மெகா ஹிட்டாகின. தற்போது பாஸ்கர் தி ராஸ்கல் என்ற படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் ஒருநாள் கேரளா சென்ற அவர் அங்குள்ள ஒரு கடை திறப்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தாராம். ஆனால், அந்த வழியே சாலைகளில் பொதுமக்கள் ஏராளமானோர் சென்று கொண்டிருந்தபோதும், நயன்தாராவை பெரிதாக கண்டுகொள்ளவில்லையாம்.
அதைப்பார்த்து நயன்தாராவுக்கு பெரிய ஆச்சர்யமாம். காரணம், இதுவே சென்னை அல்லது ஐதராபாத்தாக இருந்திருந்தால் ஆயிரக்கணக்கான மக்கள் என்னை சூழ்ந்து கொள்வார்கள். பல சமயங்களில் என்னைப்பார்க்க கூட்டம் கூடியதால் கூட்டத்தை விரட்டியடிக்க போலீசார் தடியடிகூட நடத்தியிருக்கிறார்கள். ஆனால் என் தாய்மொழி மக்களோ என்னை கண்டுகொள்ளவே இல்லை. இது மனசுக்கு வருத்தமளிக்கிறது என்று பீல் பண்ணினாராம்.