டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கமல், பல ஆண்டுகளாக ஒரு பாலிசியை பின்பற்றி வந்தார். 'ஒரு படத்தில் நடித்து முடித்த பின் தான் அடுத்த படம்' என்ற பாலிசி தான் அது. ஆனால், 'விஸ்வரூபம்' படத்துக்கு பின், அந்த பாலிசியை மாற்றி விட்டார். 'விஸ்வரூபம் - 2, பாபநாசம், உத்தம வில்லன்' என, ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்தார். இது, கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டு மொத்த கோலிவுட்டுக்குமே ஆச்சரிய அதிசயமாகத் தான் இருந்தது. இந்த மூன்று படங்களில் தற்போது, 'உத்தம வில்லன்' தான் முதலில் வெளிவர உள்ளது. இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடந்தது. விழா மேடையில் இருந்தபடி கமல், இசை தகட்டை வெளியிட, அதை, மும்பையில் இருந்த ஸ்ருதி, 'பேஸ்டைம்' தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொண்டார்.