அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் பீதி தொற்றி கொண்டுள்ளது. இதுவரை 1000 பேருக்கு மேல் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நாடு முழுக்க பன்றிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலர் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி செல்கின்றனர். பாலிவுட்டின் இளம் நடிகை சோனம் கபூருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தாக்கியுள்ளது. தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கோலிவுட்டிலும் பன்றிக்காய்ச்சல் பீதி ஏற்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் நடிகை த்ரிஷாவும், ஜெயம் ரவியும், ''அப்பாடக்கர்'' படப்பிடிப்பில் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி இருந்த போட்டோவை சமூக வலைதளங்களில் வௌியிட்டிருந்தனர். இந்நிலையில் நடிகை த்ரிஷா பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டு கொண்ட போட்டோவை தன் டுவிட்டர் பக்கத்தில் வௌியிட்டுள்ளார். இதனால் ஒருவேளை த்ரிஷாவுக்கும் பன்றிக்காய்ச்சல் நோய் தொற்றியுள்ளதா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் த்ரிஷாவோ, தனக்கு பன்றிக்காய்ச்சல் எதுவும் இல்லை என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊசி போட்டு கொண்டதாக தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.